- Terms of Services
- Privacy Policy
- வேலைவாய்ப்பு
- குழந்தை நலன்
- இயற்கை விவசாயம்
- மாடித்தோட்டம்
- சொட்டு நீர் பாசனம்
- மெஹந்தி டிசைன்
- சமையல் குறிப்பு
தன்னம்பிக்கை கதைகள் | Motivation Story in Tamil
தன்னம்பிக்கை கதைகள் | Tamil Motivation Story
லைஃப்ல நாம எப்போது நம்மளுடைய தன்னம்பிக்கையை இழந்து போகிறோமோ அப்போதே நம்மளுடைய முயற்சிகளும் நம்மைவிட்டு போய் விடுகிறது. தன்னம்பிக்கை (Self confidence) என்பது என்னால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று என் மனதில் நான் நம்பிக்கை வைப்பது. ஆனால் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் பலரிடம் இந்த தன்னம்பிக்கை என்று ஒரு எண்ணம் இல்லாமலேயே போய்விட்டது. ஆகவே அப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கோடு இந்த பதிவில் ஒரு சிறிய தன்னம்பிக்கை கதை சொல்ல விரும்புகின்றோம்.
தன்னம்பிக்கை கதைகள் – Motivation Story in Tamil:
ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது.
அப்படி என்ன அந்த விலங்குகள் கூட்டம் கூடி பேசியது என்றால். அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.
அப்போது அங்கு இருந்த ஒரு நரி சொல்லுது. சிங்கம் ஏன் காட்டு ராஜா அப்படினா.. சிங்கம் அதிக பலம் வாய்ந்த ஒரு மிருகம். அதனால தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று கூறியது.
அதனை கேட்ட புலி என்ன சிங்கம் பலம் வாய்ந்ததா? ஹ.. சிங்கத்தை விட எடையும், உயரமும், சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது. ஆகவே நான் சிங்கத்தை விட பலன் வாய்ந்தவன் என்று கூறியது.
புலி கூறியதை கேட்டுக்கொண்டிருந்த நீர்யானை சொல்லியது. அப்படி பார்த்தால் சிங்கம், புலி இரண்டையும் விட நான் அதிக உடல் எடையையும், அதிக உயரத்தையும் கொண்டிருக்கிறேன். அதேபோல் ஏன் வாயை பெரியதாக திறக்க முடியும். அப்படி நான் வாயை திறந்து சிங்கத்தை கடித்தால் சிங்கம் நொறுங்கி விடும். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று நீர்யானை சொல்லியது.
அதனை கேட்டுக்கொண்டிருந்த காண்டாமிருகம் நானும் நீர்யானைக்கு நிகரான எடையையும், உயரத்தையும் கொண்டுள்ளேன். அதோடு எல்லாரையும் விட என்னிடம் நீளமான மற்றும் கூர்மையான கொம்பு உள்ளது. இந்த கொம்பை பயன்படுத்தி சிங்கத்தை குத்தி கிழித்துவிடலாம். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று காண்டாமிருகம் கூறியது.
இதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி எனது உயரத்தை பாருங்கள். என்னை சிங்கத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. சிங்கம் என்னை தாக்க வந்தாலும் நான் உதைக்கும் உதையில் சிங்கம் பரந்து ஓடிவிடும். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று ஒட்டகச்சிவிங்கி சொல்லி முடித்தது.
அப்பொழுது ஆற்றில் அதனை கேட்டு கொண்டிருந்த முதலை நானும் சிங்கத்தைவிட பலமானவன் தான் என்னையும் சிங்கத்தால் தாக்கவே முடியாது நான் சிங்கத்தின் காலை கவ்வி பிடித்தால் என்னிடம் இருந்து சிங்கம் தப்பிக்கவே முடியாது ஆகவே நானும் பலமானவன் என்றது.
இந்த அனைத்து மிருகங்களும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த யானை தனது பலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையெல்லாம் விட உயரமும், எடையும், வீரமும் என்னிடம் அதிகமுள்ளது. எனது தும்பிக்கையை கொண்டு நான் சிங்கத்தை ஓங்கி அடித்தால் சிங்கம் சுருண்டு கீழே வீழ்ந்துவிடும். ஆகவே இந்த காட்டிலே மிக மிக பலமானவன் நான் தான் என்றது.
இதையெல்லாம் கேட்ட குரங்கு சொன்னது எத்தனை பேர் சிங்கத்தை விட பலமானவர்களாக இருந்தாலும். இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு மிக முக்கிய காரணம். அது எந்த விலங்குகளை கண்டும் பயந்ததே கிடையாது. அதற்கு பயம் அப்படினா என்னவென்றே தெரியாது. அதனால் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்று குரங்கு கூறியது.
இருப்பினும் விலங்குகள் அனைத்தும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை இந்த காட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டது.
திட்டமிட்டபடி நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜா காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் உங்களை பார்க்க சேர்ந்து வந்துள்ளன ஏன் என்று தெரியவில்லை வாங்க என்று அழைத்தது.
தன்னம்பிக்கை கட்டுரை
இதனை அறிந்த சிங்கம் நரியை நம்பி விலங்குகளை பார்க்க வருகிறது. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை எட்டி உதைத்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள்ளவே சிங்கம் சுருண்டு தூரமாக போய் விழுகிறது. அங்கிருந்த காண்டாமிருகம் தனது கொம்பினால் சிங்கத்தை குத்தி தூரமாக வீசுகிறது. சிங்கம் அங்கிருந்த ஆற்றில் போய் விழுகிறது அப்பொழுது தட்டுத்தடுமாறி சிங்கம் எழுத்து நிற்கும்போதே சிங்கத்தின் காலினை முதலை கவ்விக்கொள்கிறது. அந்த முதலையிடம் இருந்து போராடி தப்பித்து சிங்கம் வெளியே வர. நீர்யானை சிங்கத்தை தனது வாயால் கவ்வ மிக வேகமாக சிங்கத்திடம் பாய்ந்தது. நூல் அளவில் நீர் யானையிடம் இருந்து சிங்கம் தப்பித்து. இவ்வாறு ஒவ்வொரு மிருகங்களும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கியது. இதனை புரிந்துகொண்ட சிங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு மிருகங்களையும் தாக்க ஆரம்பித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு விலங்குகளாக கீழே விழ ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையும் வென்றபிறகு சிங்கம் அனைத்து விலங்குகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதிக இரத்த காயங்கத்துடன் தனது குகைக்குள் சென்றது.
மறுநாள் காலை விடிந்தது சிங்கத்துடன் சண்டை போட்ட அனைத்து மிருங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன அது என்னவென்றால். சண்டை போட்டதில் சிங்கத்திற்கு அதிக இரத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம் குகையிலேயே இருந்திருக்கும் அல்லது அதற்கு ஏற்பட்டுள்ள இரத்த காயத்தினால் தன்னுடைய உடல் வலிமையை இழந்திருக்கும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த சிங்கம் உடல் முழுவது இரத்த காயங்களுடன் அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த குகையில் இருந்து வெளியே வந்து நான் யாரு என்று என்னுடைய பலம் என்ன என்று எனக்கு தெரியும். இப்போ நீங்களும் அதை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் விதமாக அனைத்து விலங்குகளையும் பார்த்து சிங்கம் கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததை கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து ஓட்டம் பிடித்தன.
அப்பொழுதான் அந்த விலங்குகளுக்கு புரிய வருகிறது. இந்த சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் அதனிடம் உள்ள பலத்தாலோ, விலங்குகளை தாக்கும் திறனாலோ இல்லை. அந்த சிங்கம் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கை மற்றும் பயம் அப்படிங்கிற ஒரு விஷயம் அதனிடம் இல்லை என்பதால் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருக்கிறது என்று அனைத்து விலங்குகளும் புரிந்து கொள்கின்றன. திரும்ப அந்த சிங்கம் கம்பீர நடையுடன் அந்த காட்டிற்கே ராஜாவாக இருந்தது.
தன்னம்பிக்கை பொன்மொழிகள்..!
இந்த கதையில் நான் என்ன உங்களுக்கு சொல்ல வருகிறேன் என்றால்.. மனிதராகிய நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும். அதனை எதிர்கொள்ளும் தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும்.
சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள், நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம், செய்யணும்னு நினைக்கிற விஷத்தை தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம். எதற்காகவும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று யாராவது கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் இந்த உலகத்தையே வெல்லலாம்.
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். நன்றி வணக்கம்..!
Related Posts
ஒரு மஹாபாரத கதை – அடுத்தவர் வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள்.., சிறுவர்களுக்கான ஷார்ட் ஸ்டோரி, குழந்தைகளுக்கான சிறுகதை, மகாபாரதம் சகுனிக்கு கோவில் உள்ளது அது எங்கு இருக்கிறது தெரியுமா, sathya priya.
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
Story of Shalya in Mahabharata in Tamil அவசியம் இல்லாமல் நாம் அடுத்தவர் வீட்டில் உண்ணுதல் கூடாது. அப்படி சாப்பிட்டால் சல்லியன் கதை தான். யாரு...
Short Stories in Tamil பெரும்பாலானவர்களுக்கு புத்தகம் படிப்பது ரொம்ப பிடிக்கும். அதிலும் கதை புத்தகம் படிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கதை கேட்பது...
Tamil Stories for Kids நம் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தாலே அவர்கள் காலத்தில் இருந்த கதைகளை கூறுவார்கள். குழந்தைகளும் ஆர்வத்தோடு கேட்பார்கள். இது மாதிரி கதைகளை...
மகாபாரதம் சகுனி - Shakuni in Mahabharatham மகாபாரதத்தின் தீய கதாபாத்திரங்களில் ஒருவரான சகுனியின் நினைவாக ஒரு கோவில் கட்டப்பட்டிருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சகுனி கோவில்...
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை திருக்குறள் கதை
thirukkural kathai in tamil திருக்குறள்- 429 "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்." குறல் பொருள்: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து...
“வாழ்க்கை என்றால் என்ன?” ஜென் கதை
ஜென் கதைகள் மக்களுக்கு அறிவார்ந்த கதைகளை எடுத்து சொல்லி பகுத்தறிவை வளர்ப்பதை ஆண்டு ஆண்டு காலமாக கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் திருக்குறள் கதைகள், ஜென் கதைகள் என...
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Post
- செல்வம் பெருக அட்சய திருதியை அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!
- 27 நட்சத்திரத்திற்கு உரிய உணவுகள் என்ன தெரியுமா..?
- அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம்..
- அட்சய திருதி அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும் ..?
- Vellore Court DLSA (District Legal Services Authority) Recruitment 2024 Apply for Para Legal Volunteer
- அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?
- அட்சய திருதியை கவிதை 2024
- தாய் பற்றிய திருக்குறள் | Annai Thirukkural in Tamil
- அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024
- வால்நட் யார் சாப்பிட கூடாது..?
- பித்தப்பையில் வீக்கம் இருந்தால் இப்படி எல்லாம் அறிகுறி வருமா..?
- அம்மா பற்றிய கவிதை 4 வரிகளில் | Amma Kavithai in Tamil 4 Lines
Connect On Social Media
© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404
Welcome Back!
Login to your account below
Remember Me
Retrieve your password
Please enter your username or email address to reset your password.
Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை
Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை :-
தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதன் தனக்குள்ளாகவே தனது நம்பிக்கையையும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் அவற்றை ஊக்குவிக்கும் மனநிலையையும் கொண்டிருப்பதை குறிக்கிறது முருகருக்கு தன்னம்பிக்கையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது அவர் மாறிவரும் இந்த கால சூழ்நிலையில் வெற்றிபெற்ற மனிதராகவே கருதப்படுகிறார் ஏனென்றால் தன்னம்பிக்கை உடைய ஒருவரே வாழ்வின் போராட்டங்களை பிறரது உதவியின்றி செய்து முடிக்க முடிகிறது
தன்னம்பிக்கை குறைவாக உள்ள ஒரு மனிதன் தனது போராட்டத்தின் பாதி வெளியில் இருக்கிறார் என்று பொருள்படுகிறது தனது வாழ்வின் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையை சந்திக்க தனது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே ஒருவருக்கு சிறந்த படியாக அமைகிறது
தனது வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்பும் ஒரு சாமானிய மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளும் தன்னம்பிக்கை ஊட்டும் காணொளிக் காட்சிகள் மிகவும் உகந்ததாக இருக்கின்றன இதன்காரணமாகவே இணையவழி தொடர்புகளில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழி என்ற பதத்தை அதிக நபர்கள் தேடி வருகின்றனர்
தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மனநிலையும் இருக்கும் ஒரு மனிதன் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை எட்டி பிடிக்க தன்னம்பிக்கையின் உதவி மிகவும் அவசியமாகும். மனித மனோநிலையில் எத்தனையோ பயங்களும் சங்கடங்களும் எப்போதும் உண்டு அவற்றை தவிப்பதற்கு முதல்படியாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளல் மிக முக்கிய செயலாக கருதப்படுகிறது
ஏழ்மை நிலையில் இருக்கும் மனிதர்கள் தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் அவர்கள் வைத்துள்ள பொருளாதார வசதிக்கு ஏற்ப நல்ல மனோ நிலையில் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பது எழுதப்படாத வரலாறு ஆகும் எனவே ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளும் ஆகச் சிறிய செயல்களை செய்ய முற்படவேண்டும்
பெற்றோர்கள் தமது குழந்தைக்கு கல்வி போதிக்க தொடங்கும் நாள் முதலாக தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் ஏனென்றால் தன்னம்பிக்கை அதிகம் உடைய ஒரு குழந்தை பரவலாக நல்ல மதிப்பெண் நல்ல ஒழுக்கம் நல்ல கட்டுப்பாடுகள் தமக்குள்ளாகவே வளர்த்துக் கொள்கின்றனர் இவர்கள் தான் பின்னாளில் தேசத் தலைவர்களாகவும் தொழில்முனைவோர்கள் ஆகும் சமுதாயத்தில் உச்சகட்ட நிலைமை அடைந்த மனிதர்களாகவும் மாறுகின்றனர்
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Global Warming Essay in Tamil - புவி வெப்பமயமாதல் கட்டுரை
Rain essay in tamil - மழை கட்டுரை, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.
- எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023
144 Motivational Quotes in Tamil To Inspire and Win
தினசரி நீங்கள் படிக்கும் ஒரு சிறிய மேற்கோள் உங்கள் வாழ்வில் பெரிய நம்பிக்கையை அளிக்கக்கூடும். எங்களை நம்பவில்லையா? சரி, கடைசியாக ஒரு ஊக்கமளிக்கும் பொன்மொழி ஒன்றைப் படித்தபிறகு எப்போது சோர்வடைந்தீர்கள்?
கண்டிப்பாக நீங்கள் புத்துணர்ச்சி அடைந்திருப்பீர்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது எப்போதும் நிலைத்திருப்பதில்லை. அதனால்தான் தினம் ஒரு பொன்மொழியையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
ஒரு நாளை positiveஆக மாற்றுவதற்கு நமக்கு தேவை தன்னம்பிக்கை ஊட்டும் சில சொற்களே. நீங்கள் சோகமாக உணர்ந்தாலும், வாழ்க்கையின் சவால்கள் காரணமாக சோர்வு ஏற்பட்டிருந்தாலும், உங்கள் மனநிலையை மாற்றுவதற்கும் இப்பொன்மொழிகள் உங்களுக்காக காத்திருக்கிறது.
Inspirational Quotes in Tamil
Life quotes in tamil for success, tamil quotes that inspire action, best motivational quotes in tamil, quotes for new beginning in tamil, quotes on self confidence in tamil, tamil inspirational quotes on hope, inspiring tamil quotes on hard work, success motivational quotes in tamil, positivity motivational quotes in tamil, quotes on setting and reaching the goals, motivational quotes in tamil for students, quotes on the role of failures in success, inspirational quotes for all ages in tamil, tamil motivational quotes to inspire and achieve, நம்பிக்கையே எல்லாம், வழிகாட்டும் பொன்மொழிகள்.
இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்.
பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்த தருணத்தில் வாழுங்கள்.
ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்!
முக்கியம் என்னவென்றால், உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் மட்டுமே பழகுவது, அவர்களின் இருப்பே உங்களின் சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது.
எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்.
ஏழ்மைதான் என் வாழ்வின் மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.
சிறப்பான நாளை வேண்டுமென்றால், நேற்றை விட இன்னும் அதிகம் உழையுங்கள்!
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
வாழ்க்கையில் வெற்றி ஏன் அவசியம்
பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், 'நிறுத்தாதே. இப்போது துன்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக வாழ்.' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது.
வாழ்வதின் மிகப் பெரிய மகிமை ஒருபோதும் வீழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில்தான்.
இன்று முதல், நீங்கள் சந்திக்கும் அனைவரையும் நள்ளிரவில் இறந்துவிடப் போவது போல் நடத்துங்கள். நீங்கள் சேகரிக்கக்கூடிய அனைத்து கவனிப்பு, கருணை மற்றும் புரிதலை அவர்களுக்கு கொடுங்கள், மேலும் எந்த பலனையும் நினைக்காமல் அதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும்.
"வாழ்ந்தேன்" என்பதற்கான சாட்சியை பதிவு செய்யுங்கள்.
செயலே எல்லாம். செயல் ஏன் அவசியம்?
மகிழ்ச்சி என்பது தானாக வருவதல்ல. அது நமது செயல்களில் இருந்தே வருகிறது.
உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள். தோல்வியுறுங்கள். மீண்டும் முயலுங்கள். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். பெரிதாக அடிபடாதவர்கள் பெரும் சிகரங்களில் ஏறாதவர்களே. இது உங்கள் தருணம். அதை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.
திட்டமிடப்பட்ட பெரிய செயல்களை விட செய்துவிட்ட சிறிய செயல்கள் சிறந்தவை.
கரையில் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது.
இன்றைய உங்களின் செயல் அனைத்து நாளைகளையும் முன்னேற்ற வல்லது.
நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கேள்வி கேட்காதீர்கள், செயலில் இறங்குங்கள். செய்யும் செயலே நீங்கள் யார் என்பதை வரையறுக்கும்.
ஒவ்வொரு சாதனையும் "முயற்சி" என்ற ஒற்றைச் செயலில் தொடங்குகிறது.
துரு பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.
எழு! விழி! குறிக்கோளை அடையும்வரை நில்லாது செல்!
தமிழில் தலைசிறந்த ஊக்கமூட்டும் பொன்மொழிகள்
நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே, நீ நடந்தால் அதுவே பாதை.
குறிப்பிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால் மாற்றம் வராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம்தான் அந்த மாற்றம்!
ஒருபோதும் பின்வாங்க வேண்டாம். ஒருபோதும் யாரிடமும் எதையும் விளக்கவும் வேண்டாம். செய்து முடிங்கள், அதனைக்கண்டு அவர்கள் அலறட்டும்.
அதிர்ஷ்டம் கணிக்கக்கூடியதே. நீங்கள் நிறைய அதிர்ஷ்டங்களை விரும்பினால், அதிக வாய்ப்புகளை எதிர்கொள்ளுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். எனக்காக இன்னொருவர் அதை செய்ய முடியாது.
நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை.
உயர்ந்த இலக்குகளை கொள்ளுங்கள். அற்புதங்கள் எதிர்காலத்தில் அல்ல, இப்போதே நடக்கும். எதையும் உங்களை பின்னிழுக்கவோ தடுக்கவோ அனுமதிக்காதீர்கள்.
சுற்றித் திரியும் நாய் எலும்பைக் கண்டுபிடிக்கிறது.
நேற்று விழுந்திருக்கலாம், பரவாயில்லை இன்று மீண்டும் எழுங்கள்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
புதிய தொடக்கத்திற்கான நேரம் எது? மேற்கோள்கள்
ஒரு இலக்கின் முடிவு இன்னொரு இலக்கின் தொடக்கம்.
நீங்கள் தவறு செய்ய தயாராகாவிடில், உங்களால் சுயமாக எதையும் சாதிக்க முடியாது.
ஆயிரம் மைல் தொலைவுப் பயணம் முதல் சிறு அடியிலேயயே தொங்குகிறது.
முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி, முதல் அடியை எடுத்து வைப்பதே.
நான் வழியைக் கண்டுபிடிப்பேன், இல்லையென்றால் நானே உருவாக்குவேன்.
மிகச்சரியாக ஒன்றை செய்யாமல் இருப்பதைவிட, குறைகளோடு அதை செய்வது மேல்.
சுய முன்னேற்ற நம்பிக்கை பொன்மொழிகள்
நான் மெல்ல நடப்பவன்தான், ஆனால் பின்னோக்கி நடப்பவனல்ல.
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் மட்டுமே உங்களால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும், அது உங்கள் சுயமுன்னேற்றம் மட்டுமே.
ஒரு மரத்தை நட்டிருக்க சிறந்த நேரம் 20 வருடத்திற்க்கு முன்பு. அதன் பிறகு இப்பொழுது.
நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல.
உங்களிடம் உள்ள நல்ல திட்டத்துடன் இப்போதே தொடங்குவதென்பது மிகச்சிறந்த திட்டத்துடன் பின்னொரு நாளில் தொடங்குவதை காட்டிலும் சிறந்தது.
முயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம்.
வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் முயற்சி வீண்போகாது.
இன்றே தொடங்கி இருக்கலாம் என்று அடுத்த வருடம் இதே நாள் நீங்கள் நினைக்கலாம்!
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.
இவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
தோல்வியில் நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று
என் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.
முன்னாள் உள்ள மலைகள் உங்களை சோர்வாக்குவதில்லை, உங்களை சோர்வாக்குவது காலனியில் உள்ள கூழாங்கற்களே.
செய்து முடிக்கும் வரை ஒரு வேலை கடினமாகத்தான் தெரியும்.
வெற்றிபெற, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.
தன்னம்பிக்கை எப்போதும் திறமையை வெல்லும்.
எப்போதும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நீங்கள் இப்போது எதை விதைக்கிறீர்களோ, அதை பின்னர் அறுவடை செய்வீர்கள்.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
கடின உழைப்பும் விடாமுயற்சியும் பற்றிய பொன்மொழிகள்
செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி.
அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் ஈவுத்தொகை அதிக உழைப்பு, அதிக லாபம்.
திறமை உப்பைவிட மலிவானது, ஆனால் திறமையானவர்களிடமிருந்து வேற்றியாளர்களை பிரிப்பது கடினமான உழைப்பு மட்டுமே.
வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்.
தொடங்குவதற்கான வழி பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவதே.
இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்காதீர்கள். தொடர்ந்து அடித்து அதை சூடாக்குங்கள்.
நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல.
தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நம்மை நிரந்தரமாக சுத்தப்படுத்துவதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம்.
உங்கள் இலக்குகளை அடைவதன் மூலம் நீங்கள் என்ன பெறுகிறீர்கள் என்பதைவிட, உங்கள் இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பதே முக்கியம்.
வெற்றிக்கான சூத்திரங்களை கூறும் தமிழ் பொன்மொழிகள்
வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
வெற்றி என்பது எதை சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் எதை கடந்து சாதித்தோம் என்பதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டியது.
எனது வெற்றிக்கு காரணம் - நான் எப்போதும் எனது தோல்விகளுக்கு என்னைத்தவிர வேறு எந்த காரணத்தையும் கூறுவதில்லை.
நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று பொருள்!
தோல்வியிலும், தொடர் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கே வெற்றி சாத்தியம்.
வெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
நற்குணம் கொண்ட மனிதனுக்கு வெற்றி மட்டுமே உந்துதல்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.
நேர்மறை எண்ணத்தை வளர்ப்பது பற்றிய சான்றோர் சொற்கள்
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்!
வலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.
ஒருபோதும் செய்யும் செயலை கைவிடாத நபரை நீங்கள் வெல்ல முடியாது.
வாழ்க்கை என்பது உங்களை நீங்களே தேடுவதில்லை, உங்களை நீங்களே உருவாக்குவது.
வெற்றி பெறுவதற்கான விருப்பம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் பயிற்சிக்கான விருப்பமே.
முன்னோக்கி சென்றாலும் பின்னோக்கி சென்றாலும் முன்னேற்றம் உண்டு! நகர்வதுதான் முக்கியம்!
ஒரு நாளை நீங்கள் இயக்காதபோது அது உங்களை இயக்குகிறது.
கற்றல் செல்வத்தின் தொடக்கம். கற்றல் ஆரோக்கியத்தின் தொடக்கம். கற்றல் ஆன்மீகத்தின் தொடக்கம். தேடுதலும் கற்றலுமே அனைத்து அதிசயங்களின் தொடக்கமும்.
தெரிந்தால் போதாது; பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் போதாது; செய்ய வேண்டும்.
உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே.
விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும் 20வது முறை எழுந்து நிற்பது.
எல்லாம் போய்விட்டாலும் வலிமையான உள்ளமிருந்தால், உலகத்தையே கைப்பற்றலாம்.
வாய்ப்பு தானாக தோன்றுவதில்லை, நீங்கள் முயற்சிக்கும்போது அது தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.
வலிமை உடல் பலத்தால் வருவதல்ல, வெல்லமுடியாத வேட்கையினால் வருவது.
நாம் நம்மை கைவிட்டு விடக்கூடாது, பிரச்சனைகள் நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது.
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
இலக்குகளை அமைப்பதும் அடைவதும் தமிழ் மேற்கோள்கள்
உங்கள் வேகத்தைத் தக்கவைக்க ஒரு வழி தொடர்ந்து பெரிய இலக்குகளை வைத்திருப்பது.
ஒருபோதும் சும்மா இருப்பதில்லை என்று தீர்மானியுங்கள். நேரத்தை வீணடிக்காத எந்த ஒரு நபரும் நேரமின்மை பற்றி புகார் செய்ய வாய்ப்பில்லை. நாம் எப்போதும் எதையாவது செய்து கொண்டிருந்தால் எவ்வளவு செய்ய முடியும் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
இலக்குகளை நிர்ணயித்தல் உங்களால் பார்க்க முடியாததை பார்ப்பதற்காண முதல் படி.
வெற்றி எல்லாமல்ல, வெற்றி பெற வேண்டுவதே எல்லாம்.
விடாமுயற்சி ஒரு நீண்டதூர ஓட்டப்பந்தயம் அல்ல, அவை நிறைய குறுகியதூர ஓட்டப்பந்தயங்கள்.
பரிதாபாத்திற்கு உரியவராக இருங்கள் அல்லது உங்களை நீங்களே ஊக்குவியுங்கள், எதைச் செய்தாலும் அது உங்கள் விருப்பமே!
மாணவர்களுக்கு வழிகாட்டும் அறிவுரைகள்
கற்றலில் பத்தில் ஒன்பது ஊக்கமே.
உங்களால் அது முடியும், ஆனால் அதை நீங்கள்தான் முடிக்க வேண்டும்.
நீங்கள் எப்படி ஆக நினைக்கிறீர்களோ, அதையே அடைகிறீர்கள். எனவே வேண்டியதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பெரிய இலக்கை பின்தொடரும்போது வலிமையையும் உறுதியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
வெற்றியின் தேவை, மூச்சின் அளவு முக்கியமாகும்போது, நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள். வெற்றிக்கு வேறு ரகசியம் இல்லை.
சவால்களை ஏற்றுக்கொள்ள்ளுங்கள், அப்பொழுதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை நீங்கள் உணர முடியும்.
கடின உழைப்பு இல்லாமல், களைகளைத் தவிர வேறெதையும் வளர்க்க முடியாது.
தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பள்ளி, ஆசிரியர்கள் என அனைவரையும் குறை சொல்ல கற்றுக்கொடுக்க பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்து தவறுகளும் உங்களுடையதே அதுதான் மாறவேண்டும்.
செய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள். எதிர்காலம் யாருக்கும் உறுதியானதல்ல.
வெற்றிக்கான வழியில் தோல்வியின் பங்களிப்பு - பொன்மொழிகள்
உங்கள் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுவே கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.
நாம் பல தோல்விகளை சந்திக்கலாம் ஆனால் தோற்கடிக்கப் பட்டுவிடக்கூடாது.
வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.
இங்கு தோல்வி மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் தோல்வி என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு கட்டுக்கதை.
கடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.
பிரச்சனைகள் செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் அல்ல அவை சரியான திசைக்கான வழிகாட்டிகள்.
ஒன்றும் செய்யாமல் வெற்றி பெறுவதை விட பெரிதாக ஒன்றை செய்து தோல்வியடைவதையே விரும்புகிறேன்.
தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும்.
முயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.
வெற்றி எனும் உணவில் சேர்க்கப்படும் மிகச்சிறந்த சுவையூட்டி தோல்வி.
வெற்றியாளர்கள் தோல்வியை எற்றுகொண்டதில்லை, எற்றுக்கொள்பவர்கள் வெல்வதில்லை.
மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!
அனைத்து வயதினருக்கும் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்
தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
உங்களின் அறிவைவிட முயற்சியே வெற்றிக்கு அவசியம்.
விளையாட்டில் பங்கெடுத்துக்கொள்ளாமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள், அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
ஆற்று நீர் பெரும் பாறையும் உடைப்பது, அதன் வலிமையால் அல்ல, விடாமுயற்சியினால்!
இன்னொரு முறை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். அது ஒரு செயலை இன்னும் சிறப்பாக செய்வதற்கான இன்னொரு வாய்ப்பு!
கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
கரைகளை கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலம் இன்னும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!
பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார். நீ முன்னேறுவது உறுதி!
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
இலக்குகளை எட்ட உத்வேகமளிக்கும் மேற்கோள்கள்
ஊக்கம் என்பது, உங்கள் கனவுகள் உழைப்பு எனும் ஆடையணியும் போது கிடைப்பது!
உங்களால் கனவு காண முடிகிறதென்றால், அதை அடையவும் முடியும்.
மிகப்பெரும் கனவுகளில் வெல்வது எளிது, காரணம், அதை செய்யமளவு அதீத ஆர்வம் அனைவருக்கும் இருப்பதில்லை.
இலக்கு என்பது காலக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு.
உங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கனவுகள் பொய்த்துப் போகும் ஒரே இடம், உங்கள் எண்ணங்களில் மட்டுமே.
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களால் மட்டுமே, முடியாதவற்றை முடிக்க முடியும்.
காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது!
ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது இலட்சியம்.
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
Motivation Essay
உந்துதல் என்பது ஒரு நேர்மறையான தன்மையைக் கொண்ட ஒரு வார்த்தையாகும், மேலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் உண்மையில் ஈர்க்கப்பட வேண்டும். நம் அனைவருக்கும் உத்வேகத்தின் வெவ்வேறு ஆதாரங்கள் உள்ளன, சில சமயங்களில் நமக்கு சில உத்வேக ஆதாரங்கள் உள்ளன. உங்கள் பள்ளிப் பணிக்கு உதவியாக இருக்கும் இந்தத் தலைப்பு தொடர்பான சில கட்டுரைகளின் தொகுப்பை இங்கே கொண்டு வந்துள்ளோம்.
Table of Contents
உந்துதல் பற்றிய குறுகிய மற்றும் நீண்ட கட்டுரைகள்
கட்டுரை 1 (250 வார்த்தைகள்) – உந்துதல்.
உந்துதல் என்பது, எல்லாமே நேர்மறையாகத் தோன்றும்போது, நம் பணியை முடிப்பதில் வித்தியாசமான உற்சாகம் இருந்தால், அந்த மனநிலையை உந்துதல் என்று வரையறுக்கலாம். ஒவ்வொரு முறையும் நாம் வெற்றியடைவதில்லை, ஆனால் புதிதாகத் தொடங்க, நமக்கு ஒருவித உந்துதல் தேவை. நாம் உத்வேகம் பெற்றவுடன், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் நம்பிக்கையுடனும் தொடங்குவோம். உத்வேகம் குளுக்கோஸ் போல செயல்படுகிறது, இது நமக்கு ஆற்றலை அளிக்கிறது.
உத்வேகம் என்றால் என்ன ?
இது ஒரு உணர்வு மற்றும் உங்களின் உத்வேகத்தின் ஆதாரம் யாராக இருந்தாலும் இருக்கலாம், அது ஒரு நபர், ஒரு புத்தகம், ஒரு பிரபலம், ஒரு ஆசிரியர், ஒரு பெற்றோர், உங்கள் கனவுகள், எதுவாக இருந்தாலும் இருக்கலாம். எங்களால் முடிந்ததைச் செய்ய மற்றும் எங்கள் இலக்குகளை அடைய நம்மைத் தூண்டும் அந்த ஆதாரங்கள் எங்கள் உத்வேகத்தின் ஆதாரமாகும்.
ஒரு ஆசிரியர் நம்மை நல்ல மதிப்பெண்கள் எடுக்கத் தூண்டும் விதம். நம் பெற்றோர்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்து கற்றுக்கொள்ள தூண்டுகிறார்கள்; இவை அனைத்தும் உத்வேகத்தின் வெவ்வேறு ஆதாரங்கள்.
எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர் என் அப்பா. ஆனால் நான் முதலில் விழுந்தபோது, நான் சைக்கிள் கற்க மறுத்துவிட்டேன். ஆனால் என் தந்தை என்னை ஊக்கப்படுத்தினார், இதன் விளைவாக இன்று எனக்கு இது எளிதான பணியாக இருந்தது.
எனவே, வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்களுடன் பேசுவது மட்டுமே உத்வேகத்தின் ஆதாரம் அல்ல, ஆனால் நீங்கள் எங்கிருந்தும் மற்றும் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
நம் அனைவருக்கும் வெவ்வேறு உணர்வுகள் உள்ளன, ஒன்றாக அவர்கள் வாழ்க்கையின் கதையை உருவாக்குகிறார்கள். நாம் சிரிக்கும், அழும், சோகமான விதம் சில நேரங்களில் நமக்கு உத்வேகம் தேவை. நாம் விட்டுக்கொடுக்க ஆரம்பித்து விரக்தியடையத் தொடங்கும் ஒரு காலகட்டம் நம் வாழ்வில் எப்போதும் உண்டு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலர் தற்கொலை போன்ற சட்டப்பூர்வ குற்றத்தைக்கூட நோக்கி நகர்கிறார்கள். எனவே, உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருங்கள், அது உங்கள் செயல்பாடுகளைத் தூண்டுவது மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக இருக்கவும் உதவுகிறது.
கட்டுரை 2 (400 வார்த்தைகள்) – உத்வேகத்தின் ஆதாரங்கள் என்ன
உத்வேகம் என்ற சொல் நோக்கத்திலிருந்து பெறப்பட்டது மற்றும் இது உத்வேகத்தின் மூலத்தைப் போன்றது. வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் நம் அனைவருக்கும் உத்வேகம் தேவை. சில சமயங்களில் நம் இலக்குகளை அடைய உந்துதல் தேவை, சில சமயங்களில் அமைதியான வாழ்க்கையை நடத்த வேண்டும். அது குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, நம் அனைவருக்கும் தேவை.
உத்வேகத்தின் ஆதாரம்
அது உங்கள் பள்ளி ஆசிரியராகவோ அல்லது உங்கள் சொந்த தாயாகவோ இருக்கலாம், எங்கள் நிலைமை என்ன என்பதைப் பொறுத்து.
- மக்களிடமிருந்து: எங்கள் வாழ்க்கையின் சிறந்த பயிற்சியாளர் எங்கள் தாய், ஆனால் சில சமயங்களில் வேறு சிலர் தங்கள் இலக்கை நன்கு புரிந்துகொள்வார்கள், அதனால் அவர்கள் எங்களுக்கு ஒரு உந்துதலாக செயல்படுகிறார்கள். நம் தாயிடம் பேசும்போது, நமது மூளை அதிக அளவில் ஆக்ஸிடாசினை வெளியிடுகிறது, அது தானாகவே நம்மை நன்றாக உணரத் தொடங்குகிறது, மேலும் நாம் நன்றாகவும் உந்துதலுடனும் உணர ஆரம்பிக்கிறோம் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
- பிரபலங்கள்: எங்களுக்குப் பிடித்த நபர்கள், ஒரு திரைப்பட நட்சத்திரம், ஒரு விளையாட்டு வீரர், ஒரு ஜனாதிபதி அல்லது வேறு எத்தனை பேர் வேண்டுமானாலும் உங்கள் உத்வேகமாக இருக்கலாம். நாம் ஒருவரைப் போல இருக்க விரும்பினால், நாம் அவர்களைப் பின்தொடரத் தொடங்குகிறோம், இதனால் அவர்கள் நம் உத்வேகமாக மாறுகிறார்கள்.
- விலங்குகளிடமிருந்து: ஒரு நாயைப் போல நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கும் பல விலங்குகள் உள்ளன, அவை ஒருபோதும் சோகமாக இருக்காது மற்றும் எப்போதும் அதன் உரிமையாளரை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கும் ஒரு எறும்பு, மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி, நமது தோல்விகளை நாம் பின்வாங்கக் கூடாது என்று கற்றுக்கொடுக்கிறது. இதேபோல், இன்னும் பல விலங்குகள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கின்றன, உங்கள் கண்களைத் திறந்து உங்கள் சுற்றுப்புறங்களை பகுப்பாய்வு செய்து கொண்டே இருங்கள்.
- இயற்கை: இயற்கைக்கு வானிலை போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, ஒவ்வொரு பருவமும் நமக்குப் பிடிக்காது, ஆனாலும் நாம் வாழ்கிறோம் மற்றும் ஒரு நல்ல பருவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறோம். மற்றொரு சிறந்த உதாரணம் நதி, அது எவ்வாறு பாய்கிறது மற்றும் மலைகள் வழியாக கடலுக்கு செல்கிறது. இது உண்மையில் உத்வேகம் அளிப்பது மற்றும் நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கிறது.
- புத்தகங்கள்: அழகான கதைகளுடன் அழகான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பல புத்தகங்கள் உள்ளன மற்றும் புத்தகங்கள் உத்வேகத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. புத்தகங்கள் நமது சிறந்த நண்பன் மற்றும் சிறந்த ஊக்குவிப்பான்.
சில சமயங்களில் ஏமாற்றம் அல்லது சோகமாக இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல, சில சமயங்களில் எல்லோருக்கும் ஏற்படும் மற்றும் மக்கள் வெவ்வேறு நபர்களைச் சந்தித்து மேலே குறிப்பிட்ட ஆதாரங்களை அணுகுவதன் மூலம் உத்வேகம் பெறுவார்கள். உந்துதல் ஒரு ஆற்றல் பானமாக செயல்படுகிறது, மேலும் நாம் அதிக கவனம் மற்றும் உந்துதலாக உணர ஆரம்பிக்கிறோம். எனவே, உங்களின் உந்துதலை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், அது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
கட்டுரை 3 (600 வார்த்தைகள்) – உந்துதல்: வகைகள், முக்கியத்துவம் மற்றும் உந்துதல் பெறுவது எப்படி
உந்துதல் என்பது பொதுவாக ஒரு சொல் ஆனால் அது உங்கள் வாழ்க்கையை சாதாரண நிலையிலிருந்து அற்புதமான நிலைக்கு மிக எளிதாக மாற்றுகிறது. ஒரு ஊக்கமளிக்கும் நபர் ஆற்றல் மற்றும் நேர்மறை நிறைந்தவர். இப்படிப்பட்டவர்களிடம் பேசும் போது நமக்கு உத்வேகம் கிடைக்கும். இது உற்சாகத்தையும், புதிய நம்பிக்கையையும், நம்பிக்கையையும் நம் இலக்கை அடைய உதவும் ஒரு உணர்வு, மேலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யத் தூண்டுகிறது.
உத்வேகத்தின் வகைகள்
இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம், முதல் உள்ளார்ந்த ஊக்கம் மற்றும் இரண்டாவது வெளிப்புற உந்துதல்.
- உள்ளார்ந்த உந்துதல்: உள் குரல் போன்ற உணர்வைக் கொண்டிருப்பது, எடுத்துக்காட்டாக, உங்களிடம் மோசமான கையெழுத்து இருந்தால், அதை மேம்படுத்த விரும்பினால், உங்கள் கையெழுத்தை மாற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இங்கே உங்கள் மீது ஒரு உள் அழுத்தம் இருக்கும், இது உங்களைத் தூண்டுகிறது மற்றும் உங்களை சிறப்பாக ஆக்கத் தூண்டுகிறது.
- வெளிப்புற உந்துதல்: சில சமயங்களில் நாம் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் நமது செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு வெளிப்புற உந்துதல், இது உங்கள் கையெழுத்தை மேம்படுத்த உங்களை ஊக்குவிக்கும் உங்கள் ஆசிரியர்கள் அல்லது பெற்றோராக இருக்கலாம், மேலும் நீங்கள் முயற்சி செய்வீர்கள் ஆனால் உள்ளார்ந்த உந்துதல் செய்யும் வழியில் அல்ல.
உத்வேகத்தின் முக்கியத்துவம்
- உந்துதல் நமது இலக்கை அடைய உதவுகிறது.
- இது நம்மை உற்சாகப்படுத்தும் ஆற்றலால் நிரப்புகிறது மற்றும் நமது பாதையை எளிதாக்குகிறது.
- உந்துதல் நம்பிக்கையை நிரப்புகிறது மற்றும் ஒரு நபர் உறுதியளிக்கிறார் என்றால், அவர் எதையும் செய்ய முடியும் மற்றும் வேறுபட்ட நம்பிக்கையுடன் நிரப்பப்படுகிறார்.
- ஒரு ஊக்கமளிக்கும் நபர் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார் மற்றும் ஒருபோதும் மன அழுத்தத்தை உணர மாட்டார். அமைதியான வாழ்க்கைக்கு நம்பிக்கையான கண்ணோட்டம் அவசியம்.
- ஒரு ஊக்கமளிக்கும் நபர் எப்பொழுதும் நேர்மறையான உணர்வைக் கொண்டிருப்பார், மேலும் மக்கள் அவரைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள்.
- உந்துதலின் தாக்கம் நபருக்கு நபர் மாறுபடும், ஏனெனில் இது மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற உதவுகிறது, இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது மற்றும் பொதுவாக பணியாளர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இது உதவுகிறது.
- ஒரு வற்புறுத்தும் நபர் புதிய யோசனைகளையும் திட்டங்களையும் உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறார்.
எப்படி உத்வேகம் பெறுவது
- திரைப்படங்களைப் பாருங்கள். உத்வேகம் தரும் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல திரைப்படங்கள் இங்கே உள்ளன. நாம் ஒரு திரைப்படம் அல்லது வீடியோவைப் பார்க்கும்போது, தானாகவே அதனுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். வீடியோவைப் பார்ப்பது நம் மனதில் விரைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதனால்தான் படத்தின் இயக்குனர் தனது படத்தின் மூலம் ஒரு செய்தியைக் கொடுக்க விரும்புகிறார்.
- உத்வேகம் தரும் வீடியோக்களைப் பாருங்கள்: நம்மிடையே பல பிரபலமானவர்கள் நிறையப் போராடியிருக்கிறார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, அது நம்மை கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. யூடியூப்பில் இது தொடர்பான பல ஆயிரம் வீடியோக்கள் இருக்கும். உங்கள் உத்வேகத்தை நீங்கள் பின்பற்றலாம், ஏனென்றால் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும்.
- ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள்: நீங்கள் ஏமாற்றமடைந்து, உங்கள் வாழ்க்கையில் தொலைந்து போனால், ஊக்கமளிக்கும் சில பேச்சாளர்களைக் கேட்க வேண்டும். பல்வேறு தலைப்புகளில் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கும் பல பிரபலமான பெயர்கள் இங்கு உள்ளன.
- பகவத் கீதா: இது ஒரு இந்து மகாபுரான் மட்டுமல்ல, சுமார் 700 வசனங்கள் எழுதப்பட்ட ஒரு அற்புதமான புத்தகம். இது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது மற்றும் எங்களுக்கு நிறைய ஊக்கமளிக்கிறது. வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. இது அன்றாட விஷயங்களைக் கையாளும் ஒரு புனித நூலாக இருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் ஊக்குவிக்கவில்லை.
- மற்ற புத்தகங்கள்: இதுபோன்ற பல புத்தகங்கள் மற்றும் உத்வேகம் தரும் கதை புத்தகங்கள் உள்ளன, அவற்றை நாம் உண்மையில் படிக்க வேண்டும். அவை நமக்கு விரைவான ஆற்றலைத் தந்து, நமது வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன.
இது எங்களுடைய உள் போராட்டத்தைப் பற்றியது, உங்கள் எண்ணங்கள் மற்றும் இலக்கைப் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டால், உங்களை யாராலும் தடுக்க முடியாது, மேலும் இந்த உத்வேகம் தரும் ஆதாரங்கள் உங்களுக்கு ஒரு சக்தியைப் போல் செயல்படும். நம்பிக்கையுடன் இருப்பது நல்லது, அது நம் இலக்கை அடைய உதவுகிறது மற்றும் நம் வாழ்வில் அமைதியைக் கொண்டுவருகிறது. ஒரு வெற்றிகரமான நபர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் இல்லை; ஒருவர் உள் அமைதியிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் நம்பிக்கையுடன் இருக்கும்போது மட்டுமே இதை அடைய முடியும், நாம் உந்துதல் பெற்றால் மட்டுமே அடைய முடியும்.
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
- UK & Europe
- United States
- Meet Sadhguru
- Sadhguru Radio
- Sadhguru Quotes
- Youth N Truth
- Beginner's Programs
- Free Yoga & Guided meditation
- Inner Engineering
- Isha Rejuvenation
- See all beginner programs
- Advanced Programs
- Bhava Spandana
- Shoonya Meditation
- Additional Programs
- Sadhanapada
- Sacred Walks
- See all additional programs
- Children's Programs
- Become a Teacher
- Monthly Events
- Free Yoga Day
- Pancha Bhuta Kriya
- Online Satsang
- Annual Events
- Lunar/Hindu New Year
- Guru Purnima
- Mahashivratri
- International Yoga Day
- Mahalaya Amavasya
- Special Events
- Ishanga 7% - Partnership with Sadhguru
- Yantra Ceremony With Sadhguru
- Sadhguru Sannidhi Sangha
- Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
Main Centers
- Isha Yoga Center
- Sadhguru Sannidhi Bengaluru
- Sadhguru Sannidhi, Chattarpur
- Isha Institute of Inner-sciences
- Isha Yoga Center LA, California, USA
- Local Centers
International Centers
- Consecrated Spaces
- Adiyogi - The Source of Yoga
- Adiyogi Alayam
- Dhyanalinga
- Linga Bhairavi
- Spanda Hall
- Theerthakunds
- Adiyogi - The Abode of Yoga
- Mahima Hall
- Isha Health Solutions
- Online Medical Consultation
- In-Person Medical Consultation
- Ayurvedic Therapies
- Other Therapies
- Residential Programs
- Diabetes Management Program
- Joint and Musculoskeletal Disorders Program
- Sunetra Eye Care
- Ayur Sampoorna
- Ayur Rasayana Intensive
- Ayur Rasayana
- Pancha Karma
- Yoga Chikitsa
- Ayur Sanjeevini
- Non-Residential Programs
- Obesity Treatment Program
- ADHD/Autism Clinic
- Cancer Clinic
- Conscious Planet
Life Quotes in Tamil: வாழ்க்கையை அற்புதமாய் வாழ்ந்திட... சத்குருவின் வாசகங்கள்!
வாழ்க்கையில் நீங்கள் எந்த கட்டத்தில் இருந்தாலும் பயம், பதற்றம், துன்பம் போன்ற எதிர்மறை தாக்கங்களைத் தவிர்த்து, ஆழமாய் வாழ்வை புரிந்துகொண்டு அற்புதமாய் வாழ்ந்திட வழிகாட்டும் சத்குரு வாசகங்களின் ஒரு தொகுப்பாக இந்தப் பதிவு அமைகிறது.
முழுமையாய் வாழ வழிகாட்டும் சத்குருவின் குருவாசகங்கள்! (Life Quotes in Tamil)
Quotes Loop
- [ August 10, 2022 ] காந்தியின் அகிம்சை கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] சிறந்த உலகத்தை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு கட்டுரை Katturai In Tamil
- [ August 10, 2022 ] க வரிசை சொற்கள் Kalvi
- [ August 7, 2022 ] உணவு கலப்படம் கட்டுரை Katturai In Tamil
ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes
- Motivational Quotes In Tamil
- ஊக்கம் தரும் வரிகள்
- Tamil Motivational Quotes
Here are a collection of ( ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes ) Tamil motivational quotes in Tamil font, These will help to grow positive things in mind. Tamil motivational quotes help to achieve the success which will motive you.
நேற்று நடந்த இழப்புக்கள மறந்து… நாளை வெற்றியை அடைவதற்காக… இன்றைய நாளை நம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
வெற்றிக்கான ஆயுதம் அனுபவம் அதை யாராலும் உங்களுக்கு தேடி தர முடியாது.. அதற்கு பல எதிரிகளையும்… பல துரோகிகளையும்… பல தோல்விகளையும்… சந்திக்க வேண்டும்.
எங்கே நீங்கள் அதிகம் காயங்களையும் வலிகளையும் சந்திக்கிறீர்களோ அங்கே தான் உங்களுடைய வாழ்க்கையின் பாடம் ஆரம்பிக்கிறது.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ.. அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்… எந்த ஒரு மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ… அந்த மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் நன்றாக தான் இருப்பான்… இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்..!
பேராசை என தோன்றினாலும் பரவாயில்லை எப்போதும் உங்கள் இலக்குகளை மிகவும் உயரமாக குறி வையுங்கள்.
உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும்.. நம்பிக்கை வையுங்கள்..!
நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் சந்தர்ப்பங்களில் தான் உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் உத்வேகம் கிடைக்கின்றது..!
வாய்ப்புக்கள் விலகிப் போவதை எண்ணி கலங்கி நிற்காதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து விடா முயற்சி செய் நீ இழந்ததை விட மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்..!
வெற்றியின் பரம ரகசியம் எங்கே ஒளிந்திருக்கிறது தெரியுமா… நீ செய்வதை விரும்பி செய்வதில் தான் இருக்கிறது.
உன் உடலை உன் உழைப்பு வலிமையாக்கும் உன் மனதை காயங்களும்… தோல்விகளும்… துரோகங்களும் தான் வலிமையாக்கும்.
உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று எண்ணாதே… உன் சோதனைகளை எதிர்த்து நிக்கும் தன்னம்பிக்கை எவ்வளவு பெரியது என்று எண்ணிக் கொள்.. நேர்மறையான எண்ணங்கள் சோதனைகளை விரட்டியடிக்கும்.!
அன்பை உன் இதயத்தில் வைத்துக் கொள்.. அறிவை உன் செயலால் காட்டு… ஆணவம் உன் காலுக்கு அடியில் இருக்கட்டும்… தன்னம்பிக்கை மட்டும் தான் உன் மொத்த உருவமாக இருக்க வேண்டும்..!
உன்னை யாருக்குமே பிடிக்கவில்லை என்று வருத்தப்படுவதற்கு நீ சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல.. உன்னை உனக்கு மட்டும் பிடித்தால் போதும்.. நீ என்பது நீயே..!
வாழ்வில் தொடர் தோல்விகளும் சோதனைகளும் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் எதிர்த்து நில்லுங்கள் நாளை நீங்கள் பெறப் போகும் வெற்றிக்கான படிக்கட்டுகள் அவை தான்..!
உறக்கம் என்பது உற்சாகத்துடன் விழிப்பதற்கே அதே போல தான் வீறு கொண்டு எழுவதற்கே உன் தோல்விகளும்..!
நீ மற்றவர்களை போல அழகாக இல்லை என்று கவலை கொள்ளாதே உன் தகுதி உயரும் போது மற்றவர்களை விட நீ அழகாக தெரிவாய்…! எப்போதும் உன் தகுதியை வளர்த்துக் கொள்..!
We believe that these Tamil Motivational Quotes will useful to you. Read here other tamil quotes
- motivational quotes in tamil
- tamil motivation quotes
- Tamil Motivational
- Tamil Quotes
Related Articles
அம்பேத்கர் பொன்மொழிகள்
Tamil Quotes – சிறந்த சிந்தனை வரிகள்
ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்.
All Copyright © Reserved By QuotesLoop 2023
- Children’s Books
- Health Books
- Horror Books
- Science Books
- Science Fiction
- Short Stories
- Story Books
- Tamil Kids Books
- Akila Govind
- Amuthavalli Kalyanasundaram
- Balakumaran
- B. Jeyamohan
- Jayakanthan
- Kalki Krishnamurthy
- Mythili Sampath
- Na. Parthasarathy
- Pattukkottai Prabakar
- Premalatha Balasubramaniam
- Ponniyin Selvan
- R Maheshwari
- Rajam Krishnan
- Rajesh Kumar
- Ramanichandran Novel
- Subashree Krishnaveni
- Sujatha Rangarajan
- Uma Balakumar
- Uma Maheswari Krishnaswamy
- Vaduvoor K.Duraiswamy Iyengar
- Viji Vignesh
- Yaddanapudi Sulochana Rani
- All Tamil Books
Login to your account
Motivational books.
Read Motivational books in Tamil language. Download Tamil Motivational books PDF copies from here. We have a huge collection of Tamil Motivational PDF books that we have collected from various sources and added all together here.
சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் By Brian Tracy
Niram Maarum Uravugal by C P Hariharan
Happiness Quotient By C P Hariharan
Declining Human Values by C P Hariharan (Motivational Stories)
Mella Thiranthathu Kathavu by C P Hariharan
Role Of Moral Science In Our Lives By C P Hariharan
Struggle For Survival By C P Hariharan
Thai Thanthayarin Thavippu by C P Hariharan
Thaayam Tamil Motivational Book
Ungalukkul Oru Vilaiyilla Aartral Tamil Motivational Book
Tholaiyunarvu Tamil Motivational Book
Suya Munnetram Tamil Motivational Book
Virpanayil Vetri Tamil Motivational Book
Vaagai Sudum Sinthanai Tamil Motivational Book
Prathanai Ennum Magaththana Shakthi Tamil Motivational Book
Relax Edu Thalaivaa Tamil Motivational Book
Saakku Pokkukalai Vitoliyungal tamil motivational book
Naan Nandragave Irkkiren Tamil Motivational Book
Kelvikuriyum Achariyakuriyaga Tamil Motivational Book
Business Secrets Tamil Motivational Book
Perithagave Sinthiyungal Tamil Motivational Book
You Can Win Tamil PDF Book By Shiv Khera
Nermarai Sinthanayin Arputha Vilaivu Tamil Motivational Book
Nanbargalai Ezhithaga Peruvathu Eppadi Tamil Motivational Book
Manasu Pola Vazhkai Tamil Motivational Book
Aangalin Poorvigam Sevvai Pongalin Poorvigam Sukran Tamil Motivational Book
Kudisai By Vidhya Subramaniam
Konjam Kasu Konjam Kalvi Tamil PDF Books
- _Success Stories
- _Inspirational Stories
- __Motivational Stories
- __Famous Personalities
- __Real Stories
- _Moral Stories
- _Short Stories
- _Kutty Stories
- Phoenix Pengal
- Tamil Stories
தன்னம்பிக்கை கவிதைகள்
- சோக கவிதைகள்
நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடுவதில்லை.
| motivational quotes in tamil.
வாழும் வாழ்க்கை கூட அழகு தான், அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு. வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான் எதுவும் நிரந்தரமில்லை. ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள், அதுபோல தான் நம் மனத்திற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள். எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை. இந்த பதிவில் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கவிதை வரிகளை ( Motivational Quotes in Tamil ) இங்கு நீங்கள் காணலாம்.
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால்.
முயற்சி செய்து கொண்டே இரு. ஒரு நாள் தோல்வி தோற்றுப்போகும் உன் முயற்சியிடம்.
வெற்றி பெற விரும்பினால், தடைகளை உடைத்து செல். நம்பிக்கையை விதைத்து செல்.
ஊனம் ஒரு தடையல்ல. ஊன்றுகோலாய் உன் தன்னம்பிக்கை இருக்கும்போது.
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள் வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்
நடப்பது நம் கையில் இல்லை நாம் நினைத்தாலும் நடக்குமா என்று நினைப்பதற்கு முயற்சியை நினைவில் வைத்து கடந்து செல்..
பாதையில் நடக்கும்போது நீங்கள் இலக்கைப் பற்றி யோசிக்காதபோது, நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள்.
எதிலும் வாழ பழகிக்கொள் அப்போது தான் எதையும் தாங்கும் இதயம் வரும் !
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில் !
தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்!
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!
தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!
அடுத்தவரோடு ஒப்பிட்டு உனை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்தது உனக்கு நீயே !
நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல ஒளி வீசப் போகும் விண் மீன்கள் !
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்..
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.., எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்.., எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை, வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம்., தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்...
இருளான வாழ்க்கை என்று எண்ணாதே கனவுகள் முளைப்பது கூட இருளில் தான் !
எளிதில் காணப்படுவது என்றென்றும் நிலைக்காது என்றென்றும் எஞ்சியிருப்பது எளிதில் கிடைக்காது
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே
உலகம் உன்னை அறிவதை விட உன்னை பற்றி உலகிற்கு அறிமுகம் செய்துகொள்
வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.!
சுமைகளை கண்டு துவண்டு விடாதே.. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.
ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம்.. ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு.. இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
தன்னம்பிக்கை கவிதைகள் (Motivational quotes in tamil)
Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil | நீங்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற, உங்களின் இலக்கை அடைய, எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க, உங்களை ஒரு வெற்றியாளராக மாற்ற என உங்களுக்குள் தன்னம்பிக்கையை பிறக்க வைக்கும் வரிகளை இந்த பதிவில் கொடுத்துள்ளோம். வாழ்க்கை என்பது கணிக்க முடியாத ஒன்று. இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை அதுதான் வாழ்க்கையின் அழகு. வாழ்க்கையின் உண்மைகளை நம் வாழ்வின் மூலம் மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. மற்ற வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்,
இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் Kavithai App
நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.
Copyright © 2022 | Powered by kavithai.org
IMAGES
VIDEO
COMMENTS
See the collection of the Best Motivational and Inspirational Stories in Tamil. You can also check Success Stories from Famous Personalities, Businessmen, Sportsmen, Entrepreneurs, Students, Teachers etc. Read more about the Motivational Story in Tamil and Positive Energy Story in Tamil for Employees, Business, Youngsters, Leadership, Love, Men ...
motivational stories life மோடிவேஷனல் ஸ்டோரிஸ் வாழ்க்கை English summary Motivational stories: Overcoming your fear to achieve the victory in your life.
தன்னம்பிக்கை கதைகள் | Tamil Motivation Story Advertisement லைஃப்ல நாம எப்போது ...
Tamil Motivational Quotes Success - தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்க்கை என்பது ...
Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது ஒரு ...
Motivational Quotes in Tamil - நம்பிக்கை, ஊக்கத்துடன் செயலாற்றும் மனிதர் ...
Motivational Stories in Tamil - See the collection of best inspirational and feel good stories in tamil. Also check success stories for students, teachers, entrepreneurs, men & women about life, business, leadership, love, god and much more at Tamil Oneindia.
Welcome to Motivation Tamil MT! If you're struggling to get started with your studies, this motivational speech is your catalyst for change. Dive into the wo...
Best Motivational Quotes in Tamil. Quotes for new beginning in Tamil. Quotes on Self Confidence in Tamil. Tamil Inspirational Quotes on Hope. Inspiring Tamil Quotes on Hard Work. Success Motivational Quotes in Tamil. Positivity Motivational Quotes in Tamil. Quotes on Setting and Reaching the Goals. Motivational Quotes in Tamil for Students.
STAY MOTIVATED DOWNLOAD MOTIVATE ME APP: https://play.google.com/store/apps/details?id=com.donow.motivatemebuy the book from here: https://amzn.to/2Ij5mniMOT...
[dk_lang lang="en"]Motivation is a word that carries a positivity in itself and one should really get inspired at some point in time. We all have different sources of inspiration and sometimes we have some sou (...)[/dk_lang] [dk_lang lang="bn"]অনুপ্রেরণা এমন একটি শব্দ যা নিজের ...
வாழ்க்கை தத்துவம் (Life Quotes in Tamil) - ஆழமாய் வாழ்வை புரிந்துகொண்டு ...
நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் ...
See the collection of the Best Motivational and Inspirational Stories in Tamil. You can also check Success Stories from Famous Personalities, Businessmen, Sportsmen, Entrepreneurs, Students, Teachers etc. Read more about the Motivational Story in Tamil and Positive Energy Story in Tamil for Employees, Business, Youngsters, Leadership, Love, Men ...
Tamil Motivational Quotes; Motivational Quotes In Tamil; Here are a collection of ( ஊக்கம் தரும் வரிகள்: Tamil Motivational Quotes ) Tamil motivational quotes in Tamil font, These will help to grow positive things in mind. Tamil motivational quotes help to achieve the success which will motive you.
Looking for some Tamil motivational books to boost your spirit? Here's a curated list of the best Tamil motivational books in PDF format that you can download for free. These books are filled with inspiring stories, practical advice, and powerful techniques to help you achieve your goals and overcome challenges. Download now and start your journey towards success and fulfillment!
Motivational stories. நிறையப் படிங்க.. அறிவு வளரும்.. முதிர்ச்சி பெருகும்! By G Uma. Updated: Wednesday, June 10, 2020, 12:51 [IST] ... Explore Tamil Oneindia.
See the collection of the Best Motivational and Inspirational Stories in Tamil. You can also check Success Stories from Famous Personalities, Businessmen, Sportsmen, Entrepreneurs, Students, Teachers etc. Read more about the Motivational Story in Tamil and Positive Energy Story in Tamil for Employees, Business, Youngsters, Leadership, Love, Men ...
Motivational Essays (Tamil) $22. FREE Delivery. Quantity. Add to Cart. Usually ships in 7 days. Item Code: MZF186. Author:
Self motivation is the best one always to achieve. ... தேர்தலுக்குப் பிறகும்.. இதே "காதலோடு ...
Motivational Quotes in Tamil Motivational Quotes in Tamil | நீங்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற ...
For any organisation, motivated employees or keeping employees motivated is a challenge. There have been many theories on this, in this video we analyse two ...
மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான மற்றும் தீவிரமான மனநோயாகும் ...