Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

நீர் பற்றிய கட்டுரை | Importance of Water in Tamil Katturai

Importance of Water in Tamil Katturai

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது என்பது உண்மை.  நீரானது மனிதருக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது உண்மை. இப்போது உள்ள காலகட்டத்தில் நீருக்காக அடுத்த உலக போரே ஏற்படலாம் என்று பேசுபவரும் உண்டு. காரணம், தண்ணீரின் தேவை அதிகரிக்கும் போது அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று உள்ளோம். மனிதன் தன் வாழ்வில் “நீர்” என்பதை மிக முக்கிய அடிப்படை தேவையாக கருதியே வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கட்டாயத்தில் இன்றைய தலைமுறை உள்ளது. நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

பொருளடக்கம்:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

ஸ்மார்ட் இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

ஆசிரியர் பற்றிய கட்டுரைகளை தெரிந்து கொள்வோமா..?

ஆசிரியர் பற்றிய கட்டுரைகளை தெரிந்து கொள்வோமா..?

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

நமது அன்றாட வாழ்வில் தண்ணீரை எப்படி சேமிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பின்  முக்கியத்துவம்!

நமது அன்றாட வாழ்வில் தண்ணீரை எப்படி சேமிப்பது மற்றும் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம்!

பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். பெருகி வரும் மக்கள் தொகையால் நீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. தண்ணீரை எப்படி சேமிப்பது, அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து இங்கு காணலாம். 

how to save water essay in tamil

Connect with us

instagram

© 2024 THE GOOD GLAMM GROUP

InstaNews

  • Visual Stories

how to save water essay in tamil

  • பிற பிரிவுகள்
  • லைஃப்ஸ்டைல்

தண்ணீர் பூமியின் அமிழ்தம் : அதை சேமிப்பது அவசியம் தமிழில்..

Save Water in Tamil Essay

Save Water in Tamil Essay

'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. தண்ணீர் இந்த பூமியின் அமிழ்தம் என்று சர்.சி.வி.ராமன் கூறியுள்ளார். அந்த அளவுக்கு நீர் அவசியமானது. நீரில்லாத உலகத்தை எண்ணிப்பார்க்கவே அச்சமாக உள்ளது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்று நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் (Importance Of Water And Need to Save Water)

நாடு முழுவதும் இல்லை உலகம் முழுவதுமே தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமாக மனித தேவைகளில் உணவு தயாரிப்பு, குளிப்பது, ஆடைகள் துவைப்பது என நீள்கிறது. இன்னொன்று விவசாய பயன்பாடு மற்றும் தொழிற்சாலை பயன்பாடு என இன்னொரு புறம் தேவை நீள்கிறது.

தண்ணீர் கிடைப்பதற்கு முக்கிய மூலம் மழை மட்டுமே. மழை பொய்த்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். வனங்கள் அழிக்கப்பட்டதால் பருவத்தில் பெய்யவேண்டிய மழையும் பொய்த்துப்போனது. அதனால் மழை பெய்யும் காலங்களில் நீரை சேமிப்பது அவசியம் ஆகும். கடலில் சென்று சேரும் நீரை அணைகள், குளங்கள், ஏரிகள்,கண்மாய்கள் என பல வடிவங்களில் நீரை சேமிக்க ஏற்பாடுகள் செய்வது அவசியம்.

how to save water essay in tamil

ஒரு அரசு மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அதைவிட முக்கியம். நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள் மற்றும் நீரை சேமிப்பதன் அவசியம் குறித்து நம்மிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.

தண்ணீரை தங்கள் தேவைக்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்துவது மட்டும் நம் கடமையல்ல. நீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு நமது பங்களிப்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீர் குறித்த சில புள்ளிவிவரங்கள் (Few Statistics Related To Water)

பூமி 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. மீதி இருக்கும் 30 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு. அதற்குள் தான் நாடும், காடும், மலையும் எல்லாமும் அடங்கியுள்ளது. 70 சதவீத நீர் பகுதியில் 97.5 சதவீத நீர் கடல்பரப்பு. அதாவது உப்பு நீர். அதாவது 2.5% மட்டுமே பயன்படுத்த தகுதியான நீராகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகள். இவையெல்லாம் போக மிஞ்சியிருக்கும் சொற்ப அளவே அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர். உலக அளவில் உள்ள நிலத்தடி நீரில் 24% நிலத்தடி நீரை இந்தியா பயன்படுத்துகிறது. அதாவது நீரை பூமியில் இருந்து உறிந்து எடுக்கிறோம்.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சூழல் மாற்றத்தால் ஏற்படும் பருவமாற்றங்களால் மழை பெய்வது குறைகிறது அல்லது கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒன்று தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும். அல்லது வெள்ளப்பெருக்கெடுத்து துவம்சம் செய்யும்.

இந்தியாவை பொறுத்தவரை 60 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்காக தவித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.2050ம் ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்கள் பில்லியனை தாண்டலாம் என்ற பகீர் தகவலும் உள்ளது. 2040ம் ஆண்டுகளில் உலக அளவில் 33 நாடுகள் பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தண்ணீர் சேமிப்புக்கான உதவிக்குறிப்புகள் (Water Saving Tips)

தண்ணீரை சேமிப்பதற்கு பெரிதாக எதுவும் செய்யத்தேவையில்லை. நமது அன்றாட வாழ்வில் நாம் செலவு செய்யும் தண்ணீரை கொஞ்சம் சிக்கனமாக பயன்படுத்தினாலே போதுமானது. தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேமிப்பாகும். இப்படி ஒரு வீடு, வீடுகள், ஊர், ஊர்கள், மாவட்டம்,மாவட்டங்கள், மாநிலம்,மாநிலங்கள் என விரியும்போது பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். ஒரு கை ஓசையால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், ஊரே கைதட்டினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நாள்தோறும் வீட்டில் குளியலறையில் , சமையலறையில் மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகிக்கும் நீரை எப்படி சேமிக்கலாம் என்று இங்கு விரிவாக கூறப்பட்டுள்ளது.

குளியலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In The Bathroom)

how to save water essay in tamil

1. குளிக்க வாளியை பயன்படுத்தவும் (Use Bucket For Bath)

குளிப்பதற்கு ஷவரை பயன்படுத்தாமல் வாளியை பயன்படுத்த வேண்டும். முதலில் வாளியில் தேவையான தண்ணீரை நிரப்பி குளிக்க செல்ல வேண்டும். பைப்பை அல்லது ஷவரை திறந்து குளிப்பதால் நமக்கு தெரியாமலே நிறைய தண்ணீர் செலவாகும். குளிப்பதற்கு குறைந்த அளவு நீரையே பயன்படுத்துங்கள்.

2. பல் துலக்கும் போது பைப்-ஐ மூடவும் (Turn Off Tap While Brushing )

how to save water essay in tamil

பல் துலக்கும் போது தண்ணீரை மூடி வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலோனோர் தண்ணீரை மூடாமல் பல் துலக்குகின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது. பற்களைத் துலக்கும் போது தண்ணீரை மூடினால் ஒரு நாளைக்கு 13 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது.

how to save water essay in tamil

3. முகம் மற்றும் கைகளை கழுவும்போது பக்கெட் பயன்படுத்தலாம் (Use bucket While Washing Face And Hand)

குழாயை திறந்து முகம், கை,கால் கழுவுவதை விட பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து கப் மூலம் முகம்,கை, கால்களை சுத்தம் செய்யலாம். தினமும் இரு முறை முகம் மற்றும் கைகளை கழுவு பழக்கம் உள்ளவர்கள் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

how to save water essay in tamil

4. பைப் கசிவுகளை சரிசெய்யவும் (Fix Your Leakage)

வீட்டில் குழாய்களில் நீர் கசிவு இருக்கிறதா என அடிக்கடி உறுதி செய்யா வேண்டும். பலவீடுகளில் நீர் கசிவுகளை கண்டுகொள்வதில்லை. ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசியுமானால் ஆண்டொன்றுக்கு சுமார் 10,200 லிட்டர் நீர் வீணாகும். எனவே சிறிதளவு நீர் தானே என கவனக்குறைவாக இருப்பது சரியல்ல.

5. ஷேவிங் செய்யும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap while Shaving)

ஷேவிங் செய்யும் போதும், முகம் கழுவும் போதும் குழாயை பயன்படுத்தாமல் மக் பயன்படுத்தலாம். சுடுநீருக்காக காத்திருக்கும் பொழுதே முகச்சவரம் செய்து விடுவது நல்லது.பின் குவளையில் நீர் நிரப்பி முகம் கழுவலாம். ஷேவிங் செய்யும் போது நுரையை துணியால் துடைத்து விட்டு பின்னர் சிறிதளவு நீரில் முகம் கழுவலாம். இதனால் தண்ணீர் சேமிக்கப்படும்.

6. புதிய தொழில்நுட்ப பைப்புகளை பயன்படுத்துதல் வேண்டும் (Use Advance Technology Tap)

புதிய தொழில்நுட்ப பைப்புகளை வீடுகளில் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக நுண் துகளாக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது புதிய குழாய்கள் வந்துள்ளன. இவை குழாயில் இருந்து வரும் தண்ணீரை பனி போன்ற துாறலாக வெளியேற்றும். இதனால் தண்ணீர் ஓட்டம் ஒரு நிமிடத்திற்கு 12 லி., என்பது 600 மி.லி.,யாக குறைகிறது. இதனால் ஒரு நாளைக்கு 35 லி., தண்ணீரை சேமிக்கலாம். இதேபோல் சென்சார் பொருத்திய குழாய்களும் பொருத்தலாம். நாம் கையை நீட்டும் போது மட்டும் தண்ணீர் வரும்.இதுவும் தண்ணீர் சேமிப்புக்கு சிறப்பான வடிவமைப்பாக்கும்.

how to save water essay in tamil

7. ஷவரை தவிர்க்கலாம் (Avoid Shower)

ஷவரில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஷவரை தவிர்த்து வாளியில் தண்ணீர் எடுத்து குளிக்கலாம். ஒருவேளை ஷவரில் குளித்தால் ஷாம்பூ மற்றும் சோப்பு போடுகையில் ஷவரில் நீரை ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். தேவையான நேரத்தில் திறந்துகொள்ளலாம்.

8. பிளஷ் செய்ய ஒருமுறை பயன்படுத்திய நீரைபயன்படுத்தவும் (Used Water For Flush)

டாய்லெட்டை ஃபிளஷ் செய்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை. உங்களிடம் இரட்டை ஃபிளஷ் டாய்லெட் இருந்தால் பொருத்தமான சமயங்களில் அரை ஃபிளஷ் பட்டனை உபயோகியுங்கள். இதன் மூலம் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஒரு ஆண்டில் 36,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் பிளஷ் செய்ய பயன்படுத்திய நீரை பயன்படுத்தலாம்.

சமையலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In the Kitchen)

1. வீணாகும் நீரை பயன்படுத்துங்கள் (Reuse Water)

காய்கறிகள், பாத்திரங்கள் கழுவும் போது அதிகளவு நீர் சாக்கடைக்குள் செல்கிறது. இதை தவிர்க்க அந்த நீரில் உள்ள கழிவுகளை வடிகட்டி ஒரு தொட்டியில் அல்லது பாத்திரத்தில் சேமிக்கலாம். இப்படி சேமித்த நீரை வாசல் தெளிக்க, தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டியில் அழுக்குப் படிந்திருந்தால் குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். இந்த நீரில் படிகாரக் கல்லை போட்டால் நீர் தெளிந்து விடும். பின்னர் இதனை பயன்படுத்தலாம்.

2. டிஷ் வாஷரை குறைவாக பயன்படுத்துங்கள் (Less Use Of Dish Washer)

டிஷ்வாஷர் எனப்படும் பாத்திரம் விலக்கும் மெஷின் அதிக நீரை எடுத்து கொள்ளும். பாத்திரங்கள் விலக்க இந்த மெஷின் முழுவதும் நீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். டிஷ்வாஷரில் ஒரு முறை பாத்திரங்களை கழுவினால் 8 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இருப்பினும் டிஷ்வாஷர் முழுவதுமாக நிறைந்த பிறகு அதை பயன்படுத்த வேண்டும். இதனால் முடிந்த அளவிற்கு டிஷ்வாஷரில் பாத்திரம் விலக்குவதை தவிர்க்க வேண்டும்.

3. கையால் பத்திரங்களை கழுவ வேண்டும் (Wash Dish By Hand)

சமையல் வேலைகள் முழுமையாக முடிந்த பின் ஒரே நேரத்தில் அத்தனை பாத்திரங்களையும் கழுவ வேண்டும். குழாயை திறந்துவிட்டு நேரடியாக பாத்திரங்களை கழுவாமல் பெரிய பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு கழுவினால் தண்ணீர் மிச்சமாகும்.

4. பாத்திரங்கள் துலக்கும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap While Dish Wash)

கையால் பாத்திரம் கழுவும் போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும் அதை கழுவுவதற்கும் குறைவான நீரே தேவைப்படும். பாத்திரங்கள் துலக்கும் போது பைப்பை மூடி விட வேண்டும். அனைத்து பாத்திரங்களையும் துலக்கிய பின்னர், பைப்பை திறந்து கழுவலாம்.

how to save water essay in tamil

5. காய்கறிகளை பாத்திரத்தில் வைத்து கழுவுங்கள் (Use Pot to Wash Vegetables)

காய்கறிகளை வெட்டியதும் ஒரே பாத்திரத்தில் போட்டு கழுவினால், பல லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். மேலும் காய்களை பாத்திரத்தில் வைத்து கழுவுவதால், கழுவிய பின்னர் அந்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

6. முடிந்தவரை நீராவியில் காய்களை வேக வைக்கவும் (Steam Whenever Possible)

காய்கறிகளை முடிந்த வரை நீராவியில் வேக வைக்க வேண்டும். காய்களை வேக வைக்க அதிக தண்ணீர் தேவைப்படும். மேலும் நிறைய நேரமும் எடுத்து கொள்ளும். நீராவியில் காய்களை வேக வைத்தால் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும். மிகவும் குறைந்த நேரத்தில் காய்கள் விரைவில் வெந்து விடும். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரே செலவாகும்.

7. நீர்ப்பாசன குழாய்களை நிறுவவும் (Install Water-Efficient Faucets)

சமையலறையில் பாத்திரம் விலக்கும் டப்பை கழுவ நிறைய தண்ணீர் தேவைப்படும். அதற்கு சுழலும் குழாயை பொருத்த வேண்டும். அதனால் குறைந்த தண்ணீர் செலவில் கழுவி விடலாம். மேலும் சென்சார் பொருத்திய குழாய்களை வீடுகளில் பொருத்த வேண்டும். இதனால் நம் தேவைக்கு மட்டும் தண்ணீர் பயன்படுத்த முடியும் என்பதால் நீர் வீணாகாது.

8. அழுக்கு உணவுகளை கழுவுவதை தவிர்க்கவும் (Avoid Rinsing Dirty Dishes)

சமையல் பாத்திரம் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை சாப்பிட்டவுடன் கழுவி விடுங்கள். காய்ந்தால் கூடுதல் நீர் தேவைப்படும். மேலும் சாப்பிட்ட தட்டுகள், சமைத்த பாத்திரங்களை எடுத்து பாத்திரம் விலக்கும் இடத்தில் போட வேண்டும். இல்லையென்றால் அந்த கழிவுகளால் உண்டாகும் அழுக்குகளையும் கழுவ தண்ணீர் அதிகம் தேவைப்படும்.

துணி துவைத்தலில் தண்ணீரை சேமித்தல் (Saving Water While Washing Clothes)

1. பழைய சலவை இயந்திரத்தை மாற்றவும் (Replace Your Old Washing Machine)

பழைய சலவை இயந்திரத்தின் செயல்திறன் குறைந்தால், அதனை உடனடியாக மாற்றி விடுங்கள். ஏனெனில் பழைய சலவை இயந்திரங்கள் சேதமானால் நீர் வீணாகும். புதிய இயந்திரத்தை வாங்குவது நல்லது. மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.

2. வெறும் சலவை இயந்திரத்தை இயக்க வேண்டாம் (Don't Run Empty Washing Machine)

சலவை இயந்திரத்தில் துணிகளை நிரப்பாமல் இயக்க வேண்டாம். எப்போதும் சலவை இயந்திரம் முழு கொள்ளளவை எட்டும் வரை பொறுத்திருந்து துணிகளை துவைக்க வேண்டும். சலவை இயந்திரம் முழுவதும் நீரை நிரப்பி வெறும் இயந்திரத்தை இயக்குவதால் எவ்வித பலனும் இல்லை. இதனால் தண்ணீர் வீணாவது மட்டுமின்றி மின்சாரமும் வீணாகிறது.

how to save water essay in tamil

3. மொத்தமாக துணி துவைக்க வேண்டும் (Wash Less Often)

சலவை இயந்திரத்தில் துணியைப் போடும் போது, அதன் முழு கொள்ளளவிற்கு துணிகளைப் போடுவது நல்லது. குறைவாக போட்டாலும், நிறைத்துப் போட்டாலும் ஒரே அளவிற்கான நீரைத் தான் சலவை இயந்திரங்கள் எடுத்து கொள்ளும். வாஷிங் மெஷினை "டிரெய்ன்" செய்யும் போது வெளியேறும் சோப் தண்ணீரை வீணாக பாத்ரூமில் விடுவதைக் காட்டிலும், எண்ணெய் பிசுக்கு சமையல் பாத்திரங்களை அதில் ஊறவைக்கலாம். அல்லது கால் மிதி, சாக்ஸ் போன்றவற்றை ஊற வைக்கலாம்.

4. சலவை இயந்திரத்தை அதிகமாக பயன்படுத்தாதீர்கள் (Stop Over Flow)

வீடுகளில் சேரும் அழுக்கு துணிகளை ஒரே நேரத்தில் துவைப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலும் கையில் துவைப்பதை பழக்கப்படுத்தி கொள்வதே நல்லது. இதனால் குறைந்த அளவு தண்ணீர் செலவாகும்.

5. கார் கழுவிய நீரை மீண்டும் பயன்படுத்துங்கள் (Reuse Water after Car Wash)

கார் கழுவிய நீரை துணிகள் ஊறவைக்க பயன்படுத்தலாம். பெரும்பாலும் பக்கெட்டுகளில் தண்ணீரை வைத்து துணிகளால் காரை துடைப்போம். இந்த நீரை வீணாக்காமல் துணிகளை ஊறவைக்கலாம். பின்னர் நல்ல தண்ணீரில் நாம் துவைத்து, அலசுவதால் சுத்தமாக இருக்கும்.

6. துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள் (Use Cold Water To Wash)

சலவை இயந்திரத்தில் துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும். கறைகள் படிந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடும் போது குளிர்ந்த நீரில் அலசினால் துணியில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். இதனால் துவைக்கும் போது பயன்படுத்தப்படும் நீரை மிச்சப்படுத்தலாம். குளிர்ந்த நீரை பயன்படுத்துவதால் எளிதில் அழுக்குகள் நீங்கும்.

வெளியில் தண்ணீரை சேமித்தல் (Outdoor Water Saving )

1. தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்த வேண்டாம் (Don't Use hosepipe for Garden)

தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்துவதால் நிறைய நீர் செலவாகிறது. கோடை காலத்தில் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. செடிகளின் கீழே தரைத்தளங்களில் தென்னை நார்களை விரித்து அதில், தண்ணீர் தெளித்தாலே போதும் நீரை அது உறிஞ்சி செடிகளின் வேர்களுக்கு உயிர் கொடுக்கும். இப்படி செய்வதால் நீரும் குறைவாக செலவாகும்.

how to save water essay in tamil

2. கார் கழுவுவதற்கு வாளியை பயன்படுத்துங்கள் (Use Bucket for Car Wash)

பெரும்பாலானோர் கார் கழுவும் போது நேரடியாக குழாயை பயன்படுத்துவர். குழாயில் வரும் நீரை கையில் பிடித்தவாறு கார் கழுவுவது கணிசமான நீர் வீணாகிறது. ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து காரை கழுவினால் போதுமானது.கார் கழுவிய நீரை செடிகளுக்கும் ஊற்றலாம்.

3. நீர் ஆவியாவதை குறைக்க நீச்சல் குளங்களை முடி வையுங்கள் (Cover Swimming Pools to Reduce Evaporation)

தற்போது வீடு, பார், விடுதிகளில் நீச்சல் குளம் உள்ளது. நீச்சல் குளம் பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதால், கோடை காலத்தில் பெரும்பாலான நீர் ஆவியாகிறது. இப்படி குறையும் நீர் மேலும் நிரப்பப்படுகிறது. இதனால் மீண்டும் நீர் ஆவியாகி வீணாகிறது. இதனை தவிர்க்க நீச்சல் குளத்தை முடி வைப்பது சிறந்தது.

4. முடிந்தவரை கழிவு நீரை குறைக்கவும் (Reduce Waste Water Where Possible)

வீணாகும் கழிவு நீரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். காய்கள், பாத்திரங்கள் கழுவ குறைந்த அளவு நீரை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் நீரை தோட்டங்களுக்கு பாய்ச்ச வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அரிசி கழுவிய நீரை வீட்டுத்தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் ஊட்டமாக வளரும்.

5. நீர்ப்பாசன முறையை பராமரிக்கவும் (Maintain Your Irrigation System)

தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச நீர்ப்பாசன முறையை பராமரிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை பயன்படுத்துவதால் மரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி தண்ணீரும் சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் அதிக நீரை உறிஞ்சும் பயிர்களை பயிர் செய்வதை விடப் பருவநிலைக்கு ஏற்ப தண்ணீரை குறைவாக எடுக்கும் பயிர்களை சாகுபடி செய்யலாம்.

6. சுத்தம் செய்ய குழாய்க்கு பதில் துடைப்பம் பயன்படுத்தவும் (Use a Broom to Clean)

வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த குழாய்களில் வரும் நீரை நேரடியாக சுத்தம் செய்யாமல் துடைப்பத்தால் சுத்தப்படுத்தாலாம். இதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கலாம்.

how to save water essay in tamil

நீரைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப முறைகள் (Technical Methods To Conserve Water)

இன்றைய நவீன காலத்தில் நீரைப் பாதுகாப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. இவைகளை பயன்படுத்தி நீர் சேமிப்புக்கு வழிவகுக்கலாம். தினமும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

ஜல் சக்தி அபியான் திட்டம் (Jal Sakthi Abhiyan Campaign) :

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இந்த பிரச்சினைகளை களையவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு 'ஜல்சக்தி அபியான்' என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த பணிபுரிவார்கள். 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்படும். மத்திய-மாநில நீர் வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள இன்ஜினீயர்கள், அதிகாரிகள் பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1 , Click Here-2

  • how to save water in tamil
  • save water in tamil essay
  • save water slogans in tamil
  • save water in tamil
  • save water kavithai in tamil
  • save water quotes in tamil
  • water quotes in tamil
  • neerindri amayathu ulagu katturai
  • about water in tamil

Trending News

நந்தன், கடைசி உலகப் போர் உள்ளிட்ட 8 படங்கள்...! மகுடம் சூடப்போவது யார்?

நந்தன், கடைசி உலகப் போர் உள்ளிட்ட 8 படங்கள்...! மகுடம் சூடப்போவது யார்?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம், நாலு வருஷமா என்ன பண்ணீங்க கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், கசந்த மண வாழ்க்கை... பிரிந்த ஜோடிகள்.. எத்தனை பேர் தெரியுமா, நடிகர் சங்க கலை நிகழ்ச்சி.. வெறும் 2 கோடிக்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்..., சன்டிவி விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள், அடடா.. அசத்த போவது யாரு சிறுவனா இந்த இளைஞன், விஜய்தான் டாப்பு the goat விநியோகஸ்தர் போட்டுடைத்த உண்மை.

  • Terms Of Use |
  • Privacy Policy |

© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved. Powered by Hocalwire

how to save water essay in tamil

  • கருவுறுவது எப்படி
  • திட்டமிடுதல் மற்றும் தயாராவது
  • அண்டவிடுப்பின்
  • கருவுருவாவதன் அறிகுறி
  • கர்ப்ப சோதனைகள்
  • கற்பத்தின் நிலைகள்
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
  • கர்ப்பத்தை எப்படி தவிர்ப்பது
  • பிரசவத்திற்கு பின்
  • அறுவைசிகிச்சை பிரசவம்
  • சுக பிரசவம்
  • பிறந்த குழந்தை
  • குழந்தையின் வளர்ச்சி
  • டயபர் தடிப்புகள்
  • குழந்தையின் உடல் நலம்
  • உணவு பட்டியல்
  • சிறு குழந்தையின் வளர்ச்சி
  • பாதுகாப்பு மற்றும் நலம்
  • நடத்தை மற்றும் ஒழுக்கம்
  • குழந்தைக்கு பயிற்சி
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • குழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்
  • பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள்
  • பெற்றோர்களுக்கான குறிப்பு
  • பிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு
  • எடை குறைப்பு
  • அழகு குறிப்புகள்
  • சமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்
  • இந்திய பாரம்பரியம்
  • வீட்டு வைத்தியம்

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

பருவமழை குறையும் காலகட்டங்களிலோ, வறட்சி ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலோதான், நாம் மழை நீர் சேகரிப்பு பற்றியெல்லாம் சிந்திக்கிறோம். மழை நீர் என்பது இயற்கையின் உன்னதமான கிஃப்ட் என்றே சொல்லவேண்டும். இந்த தூய நீரின் சேகரிப்பு/சேமிப்பு, பயன்கள் பற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியமானது. அதிலும் வருங்கால சந்ததிகளான நம் குழந்தைகளுக்கு , மழை நீர் சேகரிப்பு, பயன்கள் மற்றும் அதன் அவசியத்தை நிச்சயமாக சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது தான், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.  (Malai neer sekarippu in Tamil)

சமீப காலங்களில், பருவமழையும் கைகொடுப்பதில்லை, பக்கத்து மாநிலங்களும் தண்ணீர் தருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், விவசாயம் பாதிக்கும், விலைவாசி உயரும், விவசாயம் சார்ந்தவர்களின் தற்கொலைகள் தொடரும்; என்பதெல்லாம் தாண்டி, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட நீர் கிடைக்காமல் போகும் அபாய நிலைக்கு நம்மை நாமே தள்ளிக்கொண்டோம். ஆம்! இயற்கை தரும் இந்த உன்னத பரிசை நாம் மதிப்பதே கிடையாது! குடிக்கும் நீரை, கேன்களிலும், குளிக்கும் நீரை டேங்கரிலும் வாங்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பிளாஸ்டிக் கேன் தண்ணீர், அசுத்தமான டேங்கர் நீரினால் ஏற்படும் அபாயங்களை மறந்துவிடுகிறோம். இப்பொழுதாவது மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?!

மழை பொழியும்போது, அதை வீணாகாமல் நமது தேவைக்காகவோ அல்லது நிலத்தடி நீர் உயரவோ உபயோகப்படுத்தும் முறையே மழைநீர் சேகரிப்பு ஆகும். மழை நீரை சேமிப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. உதாரணமாக, உங்கள் வீட்டின் கூரையில் மழை துளிகள் விழுகின்றன. கூரையில் விழும் மழை நீரை, குழாய் அமைப்புகள் மூலமாக வீட்டின் தரைப்பகுதிக்கு எடுத்துவர வேண்டும். வீட்டின் கூரையில் குப்பைகள், அழுக்குகள் இருக்கலாம். எனவே அந்த குப்பைகள் கலந்துவரும் நீரை வடிகட்ட வேண்டுமல்லவா?

ஆம்! அதற்காக வீட்டின் கீழ் பகுதியில் ஒரு வடிகட்டும் தொட்டியைக் கட்டவேண்டும். இதில், மணல், ஜல்லி கற்கள் போன்ற சிலவற்றை நிரப்புவதன் மூலமாக, மழை நீரை வடிகட்டிவிடலாம். மேலும் இந்த வடிகட்டும் தொட்டியில் இருந்து, நாம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தும் ‘சம்ப்’ தொட்டிக்கு இணைப்பை ஏற்படுத்தி மழை நீரை சேமிக்கலாம்.

தேவைக்கு அதிகமாக உள்ள மழைநீரை இதே போன்றதொரு அமைப்பின் மூலமாக, நிலத்தின் அடிப்பகுதிக்கு செல்லும்படி செய்யலாம். விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். இது போல அனைவரும் செய்யத்துவங்கினால், வெகுவிரைவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது! ஏனெனில் நிலத்தில் பெய்யும் மழையில், 40 விழுக்காடு நீர் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 விழுக்காட்டிற்கும் மேலாக சும்மாவே வெயிலில் ஆவியாகுவதாகவும், 14 சதவிகிதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், வெறும் 10% மட்டுமே மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் எல்லாம் மிக அருகருகே கட்டப்படுவதாலும், இருக்கும் திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள், தார் சாலைகள் அமைத்தும் மூடப்படுவதால், இப்பகுதிகளில் பெய்யும் மழை நீரில் 5 சதவிகிதம் கூட நிலத்தினால் உறிஞ்சப்படுவதில்லை. அப்படியே வீணாகிறது. இதனால் குறிப்பாக கடலோர நகரங்களில் நிலத்தினுள் செல்லவேண்டிய மழைநீரின் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் புகுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி விடுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளை மழைநீர் சேமிப்பு முறைகள் மூலமாகத் தவிர்க்கலாம்.

மழைநீர் சேமிப்பு பயன்கள் பற்றி குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

மழை நீர் சேகரிப்பு பயன்கள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தருவது மிக மிக முக்கியம் . இதனால் அவர்களின் எதிர்காலம் சிறப்படையும், குடிப்பதற்கு கூட நீரின்றித்தவிக்கும் நிலை ஏற்படாமல் பாதுகாக்கலாம். எனவே உங்கள் குட்டீஸ், தெரிந்தவர்கள் என முடிந்த அளவு மழைநீர் சேமிப்பதன் அவசியம் பற்றிப்புரிய வையுங்கள். சும்மா சொல்லிவிட்டு விட்டுவிடாமல், நீங்களும் உறுதியாகப் பின்பற்றுங்கள். குட்டீஸ்களுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

இயற்கையான/சுவையானது மழைநீர்!

மழைநீர் ஒரு இயற்கையின் வரம். இது இயற்கையாகக் கிடைப்பது மட்டுமின்றி, சுவையானது, சத்தானது. என்னதான் நாம் சுத்திகரிக்கப்பட்ட நீரை கேன்களில் வாங்கினாலும், அது மழைநீரின் சுத்தத்திற்கு ஈடாகாது என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். மழைநீரில் எந்த அசுத்தங்களும் இல்லாமல் தெள்ளத் தெளிவாகவும், எந்த சிரமமும் இன்றி எளிதில் கிடைப்பதை சேகரித்து பயன் பெறமுடியும் என்பதை உணர்த்தவேண்டும்.

வீட்டின் தேவை நிறைவடையும்

மழை நீர் கிடைக்கும்போது அதனை சேகரித்து சேமித்து வைத்தால், சில மாதங்களுக்குத் தேவையான வீட்டின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். மீண்டும் மழை வந்தால் மீண்டும் சேமிக்கலாம்! அதிக அளவில் சேமிக்க வாய்ப்பு இல்லாதவர்கள், குறைந்த அளவில் சில நாட்களை சமாளிக்கும் அளவேனும் சேகரிக்கலாம். மழைநீர் ஒன்றும் கெட்டுப்போகாது, எனவே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கு புரியும்படி பெரியவர்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்

மழைநீர் மிக மிக சுத்தமானது. இதில் பல்வேறு மினரல்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நமக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு பயன்கள் தருகின்றது. இதை சேகரித்து வைத்துப் பயன்படுத்தினால், பல்வேறு உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம். மேலும், கேன்களில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்டதாக சொல்லப்படும் நீரோ, வீடுகளில் பயன்படுத்தும் ஃபில்ட்டர் மூலமாகக் கிடைக்கும் நீரோ, பல்வேறு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியம் அதிகரிக்கவும், வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் மழை நீர் சேகரிப்பு செய்து, அதைப் பயன்படுத்த குழந்தைகளுக்கு நாம் தான் கற்றுத்தர வேண்டும்.

இதையும் படிங்க: தைராய்ட் குணப்படுத்தும் வழிகள் !

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்

தேவைக்கு அதிகமாக உள்ள மழை நீரை வீணாக்காமல், நிலத்திற்குள் செல்லுமாறு அமைப்புகளை ஏற்படுத்தினாலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். இதை ஒருசிலர் மட்டும் செய்தால் போதாது, அனைவரும் பின்பற்றவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். ஒவ்வொரு வீட்டின் கூரையில் இருந்து வீணாகும் மழை நீரை நிலத்திற்குள் செல்லும்படி அமைப்புகளை உருவாக்க கற்றுத்தரவேண்டும். விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற முறைகளை கற்றுத்தரவேண்டும்.

விவசாயம் சார்ந்த பலன்கள்

அனைவரும் மழை நீர் சேகரிக்க ஆரம்பித்தால், நிலத்தடி நீர் தானாகவே ‘ஜிவ்’வென்று உயரும். நீரின் கடினத்தன்மை நீங்கும். பல வருடங்களுக்கு முன்பிருந்தது போல, கிணற்றில் நீர் ஊரும். அந்த நீரையே குடிப்பதற்கும் பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால், விவசாயம் சிறப்படையும், நல்ல பலன்கள் கிடைக்கும், விவசாயம் சார்ந்த தற்கொலைகள் தடுக்கப்படும். மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் இயற்கை விவசாயம் மீண்டும் உயிர்ப்பெரும். விவசாயம் மேம்பட்டால், நமக்கு தரமான உணவு வகைகள், காய்கறிகள் கிடைப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதையெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும்.

இதையும் படிங்க : குழந்தை வளர்ப்பில் பெண்கள் செய்யும் தவறுகள் ?

செலவு மிச்சம்!

மழைநீர் சேகரிப்பு செய்வதால் கிடைக்கும் முதன்மைப் பலனே செலவை மிச்சப்படுத்துவது தான். குடிக்கும் நீருக்கும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் நீருக்கும், விவசாய தேவைகளுக்காகவும் பல வழிகளில் செலவுகள் செய்கிறோம். மேலும், இது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், தேவையில்லாத மருதத்துவ செலவுகளும் மிச்சம் தானே! இதையும் குட்டீஸ்க்கு புரியும்படி சொல்லலாம்.

ஆகவே மழை நீர் சேகரிப்பு & பயன்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம். நீங்களும் பின்பற்றி, உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயம் சொல்லிக்கொடுங்கள். மேலும் ஏதாவது பயன்கள் விடுபட்டிருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

மழை வரும்போது மழைநீரை சேகரிப்போம். நம் வாரிசுகளுக்கும் சொல்லித்தருவோம். உருவாக்குவோம் வளமான எதிர்காலத்தை! நீங்களும் மாற்றத்தை உருவாக்க விரும்பினால், நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். மற்றவர்களின் குழந்தைகளையும் சமுதாய அக்கறையுடன் வளர்க்க நாமும் உதவலாம் அல்லவா?

இதையும் படிக்க:  குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள் . நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

ஆம்! அதற்காக வீட்டின் கீழ் பகுதியில் ஒரு வடிகட்டும் தொட்டியைக் கட்டவேண்டும். இதில், மணல், ஜல்லி கற்கள் போன்ற சிலவற்றை நிரப்புவதன் மூலமாக, மழை நீரை வடிகட்டிவிடலாம். மேலும் இந்த வடிகட்டும் தொட்டியில் இருந்து, நாம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தும் ‘சம்ப்’ தொட்டிக்கு இணைப்பை ஏற்படுத்தி மழை நீரை சேமிக்கலாம்.

அனைவரும் மழை நீர் சேகரிக்க ஆரம்பித்தால், நிலத்தடி நீர் தானாகவே ‘ஜிவ்’வென்று உயரும். நீரின் கடினத்தன்மை நீங்கும். பல வருடங்களுக்கு முன்பிருந்தது போல, கிணற்றில் நீர் ஊரும். அந்த நீரையே குடிப்பதற்கும் பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால், விவசாயம் சிறப்படையும், நல்ல பலன்கள் கிடைக்கும், விவசாயம் சார்ந்த தற்கொலைகள் தடுக்கப்படும். மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் இயற்கை விவசாயம் மீண்டும் உயிர்ப்பெரும். விவசாயம் மேம்பட்டால், நமக்கு தரமான உணவு வகைகள், காய்கறிகள் கிடைப்பதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதையெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆகவே மழை நீர் சேகரிப்பு & பயன்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம். நீங்களும் பின்பற்றி, உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாயம் சொல்லிக்கொடுங்கள். மேலும் ஏதாவது பயன்கள் விடுபட்டிருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

இதையும் படிக்க:  குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

how to save water essay in tamil

Thanneer Katturai in Tamil

தண்ணீர் கட்டுரை

how to save water essay in tamil

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் “ நீரின்றி அமையாது உலகு ” என்று இயம்பினார் . இந்த உலகில் உயிர்கள் வாழ நீர் அவசியம் . தாவரங்களானாலும் விலங்குகளானாலும் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ இயலாது . தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் காண்போம் .

மனித உடலில் 50 சதவிகிதத்திற்கும் மேலாக நீரே உள்ளது. தாவரங்களின் எடையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் நீர் உள்ளது. உயிர்கள் இந்த உலகில் வாழவும் வளரவும் பல்கிப்பெருகவும் நீர் மிக முக்கியமான காரணியாக உள்ளது.

இந்த உலகில் 79 சதவிகிதம் நீர் இருந்தாலும் அதில் 97.50 சதவிகிதம் கடல் நீராகவே உள்ளது. எனவே நாம் குடிநீருக்காக நிலத்தடி நீர் மற்றும் ஆறு குளம் குட்டைகளையே நம்பி வாழ வேண்டியுள்ளது. விவசாயம், பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் தொழில்களின் வளர்ச்சியினால் நாம் நுகரக் கூடிய நீரின் அளவும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மனிதரின் பலவகையிலான செயல்பாடுகளால் நீர்நிலைகள் சரியாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. இதனால் நீர் மாசுபட்டு நாம் உபயோகிக்க இயலாத வகையில் சீரழிந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீரை நாம் வரையறை இல்லாமல் இயந்திரங்களைக் கொண்டு உறிஞ்சிவிடுவதால் நிலத்தடி நீரின் மட்டமும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த உலகில் உயிர்கள் வாழ வேண்டுமெனில் நீர் மேலாண்மையை செம்மைப் படுத்தி நீர் சேமிப்பையும் பெருக்கி, மழை பெருக நம்மாலியன்ற முயற்சிகளை உடனடியாக செய்தல் அவசியம்.

ஆறு, குளம், ஏரி இவற்றை நாம் தூய்மையும் ஆழமும் படுத்தி மழை நீரை முறையாக சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்து நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மறு சுழற்சி முறையில் நீரின் உபயோகத்தை முறைப்படுத்தி நீரை சேமிக்கலாம். நீர் சேமிப்பு ஒவ்வொரு மனிதரிடமிருந்து வீட்டிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

மரங்களை வளர்க்க வேண்டும், புவி வெப்பமடைவதை தடுத்தால் மழை வளம் பெருகும். பலநாடுகளில் குடிக்கக் கூட நீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்கெனவே உருவாகிவிட்டது. இந்த நிலை மற்ற நாடுகளுக்கும் பரவும் முன்னர் நாம் பலவகைகளில் முயன்று செயல்பட்டு தண்ணீரை சேமிக்கவும், மழையைப் பெருக்கவும் வழி செய்ய வேண்டும். இதனை நாம் உடனடியாக செய்யாவிட்டால் நீர் இல்லாமல் நாமும் நமது பின்வரும் சந்ததியினரும் சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளாக நேரும்.

Thanner Katturai– Water Essay

Two thousand years back, the most renowned Tamil poet Thiruvalluvar said, “The world cannot go on without water”. For plants and animals to live on this earth, water is very much essential. Let us look at the importance of water in this essay.

Over 50% of the human body is made of water. More than 90% of plant mass is water only. For lives to live on this earth, water is the primary requisite.

Though the earth has 79% of water, over 97.50% of it is seawater. Hence for drinking and other uses, we need to depend on the water sources found on land and underground. The proliferation of agriculture, industries, and population demands more water. Hence we must use water sparingly and save it for future use.

Due to improper water management practices, the inland water sources are nor maintained properly. Hence most of the water available inland is becoming unusable. Also, the underground water is recklessly drawn leading to the depletion of water beds. For the lives to continue on this earth, we need to improve the water management practices and take steps to increase the rains.

We must take steps to clean and deepen the lakes, rivers, and other inland water sources. We must prevent water pollution and conserve water through some recycling processes. Saving water must start with every human and every household to spread tot eh entire humanity.

Growing more trees and stopping the warming of the earth will lead to more rain. In many countries, there is not adequate water to use and drink. We must act quickly before this condition spreads to other countries as well. If we do not save water and regulate its use, our generation and the future generations will have to face unforeseen struggles to live.

how to save water essay in tamil

Leave a Reply Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed .

New Smart Tamil Logo with Stroke

  • Personalities
  • Natural Resources
  • Web Stories

></center></p><h2>இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil</h2><p><center><img style=

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

  • ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

  • நில மாசுபாடு
  • காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

  • ம ரம் வளர்ப்போம்

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம் , நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

  • தமிழ் மொழியின் சிறப்பு
  • கணனியை கண்டுபிடித்தவர் யார்?

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Ganeshan Karthik

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com

Related Posts

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik.

Get in Touch with Our Social Media

Quick links, explore topics, information.

  • Privacy Policy
  • Smart Tamil Trend

New Smart Tamil Copyright 2018 – 2024. All Rights Reserved. Design by Webthik

தின தமிழ்

Rain Essay in Tamil – மழை கட்டுரை

Photo of dtradangfx

Rain Essay in Tamil – மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் எப்போது பிடித்தமானது மலை ஆகும். தனது வாழ்நாளில் மழை காலத்தை ரசிக்காத மனிதர்கள் இருந்ததில்லை இந்த பூமி செழிக்கவும் பூமியை குளிர்விக்கும் இயற்கை கொடுத்த கொடையான மழையை நாம் எப்போதும் போட்ட தவறக்கூடாது. பள்ளி மாணவரும் முதற்கொண்டு நூறு வயது அடைந்த மனிதர்கள் வரை மழையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை

Rain Essay in Tamil

 இந்த பூமியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருந்தபோதிலும் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் அளவு மிகக் குறைந்த அளவே உள்ளது இந்த நன்னீரை மனிதர்கள் வாழும் இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மழை மிக முக்கிய பணியாற்றுகிறது கடல் மற்றும் நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் நன்னீரானது மேகம் தவழ்ந்து இந்த பூமியில் மழை பொழிகிறது மழை நீரானது மலைகளில் விழுந்து நீர்வீழ்ச்சி களாகவும் நீரோடைகள் ஆகும் உருமாறி ஆறுகளில் கலக்கிறது மொத்தம் சேர்ந்த நன்னீர் பெரிய ஆறுகளாக உருவெடுத்து மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கிறது

 மனித கலாச்சாரத்தில் மழையளவு அதிகமாக உள்ள இடங்களிலேயே புதிய கலாச்சாரங்கள் தொடங்கப்பட்டன என்பது வரலாறாகும் இன்றைய அறிவியல் காலகட்டத்தில் அதிகப்படியான மழை குறைவான மழை அமில மழை சூறாவளி மழை என வகைவகையான மலைகள் செய்து வருகின்றன இவற்றிற்கு காரணம் மனித வளர்ச்சியில் அறிவியல் காரணம் கொண்டு நமது சுற்றுச்சூழலை பராமரிக்காமல் விட்டதற்கான தண்டனையாகவே உலக நாடுகள் கருதுகின்றன

 பருவமழை

 சாதாரணமாக ஒவ்வொரு பருவத்திலும் சுழற்சி முறையில் பெய்யும் மழையில் பருவ மழை என்று கூறுகிறோம் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தென் கிழக்குப் பருவ மழை என பருவ மழைகள் வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன இருந்தபோதிலும் பருவமழை தவறுதல் தற்காலங்களில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது

 சூறாவளியால் ஏற்படும் மழை 

இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஏற்படும் உயர்ந்த மற்றும் குறைந்த தாழ்வழுத்த காற்று மண்டலங்கள் காரணமாக அதிகப்படியான மலைகளை தென்னிந்திய மாநிலங்கள் பெறுகின்றன கட்டுக்கடங்காத  மழையின் அளவு இது போன்ற காரணிகளால் ஏற்படும் மழையில் பதிவாகின்றன கடந்த பத்து வருடங்களில் சூறாவளி போன்ற காற்றுடன் பெய்யும் மழையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது

Rain Essay in Tamil

 அமில மழை

 அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தன் சுகங்களுக்காக வளர்த்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறையில் தேவையற்ற வாயுக்களும் தேவையற்ற மனம் சார்ந்த வேதிப்பொருட்களும் காற்றில் கலக்கின்றன இவை சுத்திகரிக்கப்படாமல் கார்கில் கலப்பதினால் மேகத்தில் கலந்து அமில மழை பொழிகிறது. இதுபோல் இது போன்ற அமில மழை மனிதன் தோல்நோய்கள் முடியில் ஏற்படும் நோய்கள் என பரவலான நோய் ஏற்படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கு மனிதன் தனது சுகபோகங்களை குறைத்துக் கொள்வதே ஆகும் மிக அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அறிவியல் கருவிகளை பயன்படுத்துவதில் தடை போடுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் இதற்கு ஒரே தீர்வாக அரசு ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஒன்றே அருமருந்தாகும்

  நாம் செய்த இடர்பாடுகளுக்கு ஒரே தீர்வு என்பது நாம் வாழும் இடங்களில் தொடர்ந்து மரங்களை நட்டு வருவதே ஆகச் சிறந்த தீர்வாகும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மரங்களை பாதுகாக்கும் மனோநிலை மனிதனுக்கு அதிகமாக உள்ளது இதை கருவாகக் கொண்டு உலகநாடுகள் அதிகப்படியான மரம் வளர்க்கும் செயல்களை செய்யத் தொடங்கிவிட்டன இருந்தபோதிலும் தொடர்ச்சியாக மரங்களை வெட்டும் நிகழ்வுகளும் நடந்து தான் செய்கின்றன பூமியை குளிர்விக்கும் மழையை பெறுவதற்கும் விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக நன்னீரை பாதுகாக்கவும் மரம் வளர்த்தல் ஒன்றே தீர்வாகும்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை

சுற்றுலா கட்டுரை- picnic essay in tamil, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023
  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

தண்ணீர் நம் உயிர் நீர்!

நம் உயிர் காக்க தண்ணீர் அவசியம்। தாகம் போக்க, உணவு சமைக்க, உடலையும் உடமையையும் தூய்மையாக்க தண்ணீர் நம் உயிரை போல அவசியம் ஆனால் நாம் இந்த தண்ணீரை எத்தனை தேவையற்ற முறைகளில் செலவு செய்து வீணாக்கி கொண்டிருக்கிறோம் நம் வீடு கட்ட தண்ணீர் தேவை உடை செய்ய தண்ணீர் தேவை

The importance of Water

நம் துணிமணி, மூக்கு கண்ணாடி, மருந்து, ஆஸ்பத்திரியின் அனைத்து உபகரணங்கள் நாம் உட்காரும் நாற்காலி, மேசை, பேனா, பென்சில், பாத்திரம், பேப்பர், சோபா, ஸ்கூட்டர், பைக், கார் விமானம், கப்பல், துப்பாக்கி அதனுள் இருக்கும் உதிரி பாகங்கள், என்று நாம் காது குடையும் குச்சி வரை பூமியில் இருக்கும் நாம் உபயோகிக்கும் சகலமான அனைத்து சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தண்ணீர் இல்லாமல் இயங்காது। ஒரு ஜீன்ஸ் பாண்ட் தயாரிக்க 20000 லிட்டர் தண்ணீர், ஒரு குளிர்பானம் தயாரிக்க 2500 லிட்டர் தண்ணீர் என்று அனைத்து பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் தண்ணீர் செலவு பட்டியலை உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது। ஆகவே ஐரோப்பிய நாடுகளும் எல்லா பொருட்களின் மறுசுழற்சி முறையை (recycling ) தீவிரப்படுத்தியுள்ளது। மேசை, நாற்காலி, கார்கள், ஜீன்ஸ் உடைகள், மரச்சாமான்கள் என்று ஒருமுறை உபயோகப்படுத்தி வேண்டாம் என்று மக்கள் குப்பையில் எறிந்த பொருட்களை சேகரித்து அதனை தூய்மைப்படுத்தி, தேவையான சீர்மை செய்து அழகுபடுத்தி,

The importance of Water

புதிய பொருட்கள் போல் மாற்றி மீண்டும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன। வளர்ந்த நாடுகளிடம் இல்லாத செல்வமா, பணப்புழக்கமா? அவர்கள் ஏன் புதுப்பிக்க பட்ட பழைய பொருட்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்? எல்லாம் தண்ணீர் என்னும் விலைமதிப்பில்லாத உயிர் காக்கும் உயிர்நீரின் அவசியத்தை உணர்ந்துதான்!!! எல்லா பொருட்களும் மீண்டும் மீண்டும் புதிதாக உற்பத்தி செய்ய ஆகும் தண்ணீர் செலவினத்தை குறைத்து, மனிதன் , பறவை, விலங்கு என பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ள தண்ணீரை மனிதன் மட்டும், ஐந்தறிவு கொண்ட ஒரே காரணத்தால், மற்ற உயிர்களிடமிருந்து ஒரேயடியாய் அபகரித்து தேவையற்ற பொருட்களின் உற்பத்தி செலவுக்காகும் தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்। ஆகவே, உபயோகமற்ற, தேவையற்ற பொருட்களை நாம் வீட்டிலும் வாங்கி குவிக்காமல், ஒருமுறை உபயோகப்படுத்தி கலர் பிடிக்கவில்லை, மாடல் பிடிக்கவில்லை என்று நீண்ட நாள் உபயோகிக்காத எந்த ஒரு பொருளையும் குப்பையில் எறிந்து விடாமல், அல்லது வீட்டுக்குள்ளேயே பூதம் காத்த புதையல் போல உபயோகிக்காமல் வருடக்கணக்கில் போட்டு வைக்காமல், தேவைப்படும் வேறு யாருக்கேனும் சிறிய பணம் பெற்று கொண்டோ அல்லது இலவசமாகவோ கொடுத்து அந்த பொருள் உற்பத்தி செய்ய உதவிய தண்ணீருக்கு மதிப்பு அளிப்போம்।

-சுஜாதா பூபதிராஜ்

 போர்க்களமான விநாயகர் சிலை ஊர்வலம்.. திருப்பூரில் மோதல்.. படுகாயமடைந்த இளைஞர்.. 5 பேர் கைது!

water தண்ணீர்

அன்னபூர்ணா ஹோட்டல் மட்டுமல்ல! கிச்சனில் உள்ள பல பொருட்களை கண்டுபிடித்ததே அவர்கள்தான்! இது தெரியுமா

அன்னபூர்ணா ஹோட்டல் மட்டுமல்ல! கிச்சனில் உள்ள பல பொருட்களை கண்டுபிடித்ததே அவர்கள்தான்! இது தெரியுமா

ஹரியானாவில் பாஜகவுக்கு வந்த சோதனையை பாருங்க.. சீட் மறுக்கப்பட்டதால் கட்சி மாறிய முக்கிய தலைகள்!

ஹரியானாவில் பாஜகவுக்கு வந்த சோதனையை பாருங்க.. சீட் மறுக்கப்பட்டதால் கட்சி மாறிய முக்கிய தலைகள்!

 தலைமை நீதிபதி வீட்டுக்குள் யார் பாருங்க? ஆமா, மோடி ஏன் அங்கே போனாரு? கிளம்பி வந்துட்டாரு கபில் சிபல்

தலைமை நீதிபதி வீட்டுக்குள் யார் பாருங்க? ஆமா, மோடி ஏன் அங்கே போனாரு? கிளம்பி வந்துட்டாரு கபில் சிபல்

Latest updates.

அதிர வைத்த அன்னபூர்ணா ஓட்டல் ஓனர்.. வேலையை காட்டிய திமுக! புண்படுத்த வேண்டாம்.. வானதி சொன்ன வார்த்தை

  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

how to save water essay in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

SVAT21

  • தமிழ்நாடு
  • கடிதம்
  • கட்டுரை
  • ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்

மழைநீர்ச் சேமிப்பு கட்டுரை மாதிரி-2

மழைநீர் சேமிப்பு (மாதிரி-2) பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

how to save water essay in tamil

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை
  • மழைநீர்ச் சேமிப்பின் அவசியம்
  • கிராமங்களின் நிலை
  • நகரங்களின் நிலை
  • மழைநீர்ச் சேமிப்பு முறைகள்
  • முடிவுரை

முன்னுரை:

மழைநீர்ச் சேமிப்பின் அவசியம்:, கிராமங்களின் நிலை:, நகரங்களின் நிலை:, மழைநீர்ச் சேமிப்பு முறைகள்:, முடிவுரை:.

Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-1
Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-3

Post a Comment

Contact form.

contents

மொழியைத் தேர்வு செய்யவும்

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை கீழே ஊற்றமாட்டீர்கள்!

Share on Twitter

Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை கீழே ஊற்றமாட்டீர்கள். தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்வீர்கள்.

Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் அதை கீழே ஊற்றமாட்டீர்கள்!

அரிசி கஞ்சி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததா? அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் அதை சேர்த்துக்கொள்ள வேண்டுமா என்றால், ஆம் என்பதுதான் பதில், அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம். அரிசியை வேகவைத்து வடிக்கும்போது உங்களுக்கு அதில் இருந்து கஞ்சி கிடைக்கிறது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது பாரம்பரிய இயற்கை நிவாரணியாக பலவற்றை குணப்படுத்துகிறது. இங்கு இந்த சாதம் வடித்த கஞ்சி உங்கள் உடலுக்கு என்ன நன்மைகளைத் தரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துகொண்டு சாதம் வடித்த கஞ்சியை இனி கீழே ஊற்றாமல் பயன்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆற்றலை அதிகரிக்கிறது

அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. இது ஆற்றல் அதிகம் கொண்ட ஒரு உணவாகும். அரிசி வடிக்கும்போது அந்தக் கஞ்சியை சூடாகப்பிடித்து அதில் உப்பு சேர்த்து பருகினால் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்த பின்னர் ஏற்படும் சோர்வைப் போக்குகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

அரிசி வடித்த கஞ்சி உங்கள் உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளைப் போக்கும் இயற்கை வழிமுறையாகும். இது வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. இதன் இனிமையான குணங்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது

சாதம் வடித்த கஞ்சியில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை பருகும்போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்துகிறது. குறிப்பாக நோய் வாய்ப்பட்ட காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் உடல் இழக்கும் நீர்ச்சத்தை வழங்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

சாதம் வடித்த கஞ்சியில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகியவை உள்ளன. இது மூளையில் இயக்கம் மற்றும் உடல் வளர்சிதைக்கும் சிறந்தது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்கு தேவையான மெக்னீசியம் மற்றும் பொட்டாசியச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சாதம் வடித்த கஞ்சி உடலை குளுமைப்படுத்துகிறது. வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. சாதம் வடித்த கஞ்சியை பருகுவது அல்லது உடலில் பூசுவது உங்கள் சருமத்தில் உள்ள எரிச்சலைப் போக்குகிறது. சரும நிறத்தை அதிகரிக்கிறது. முகப்பருக்களை குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

சாதம் வடித்த கஞ்சியில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதைச் செய்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது

சாதம் வடித்த கஞ்சியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் தொற்றுக்களைப்போக்கிக்கொள்ளவும், நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பு

சாதம் வடித்த கஞ்சியில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். எனவே பசியைக் கட்டுப்படுத்தி, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் உங்கள் உடல் எடை முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மலச்சிக்கலைப்போக்குகிறது

சாதம் வடித்த கஞ்சியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

தொடர்புடையை செய்திகள்

This site will use cookies for managing the user session. You will not be able to login unless you accept the cookie policy.

Read cookie policy

Accept cookie policy

மழைநீர் சேகரிப்பு

(Article on Rainwater Harvesting in Tamil Language of India)

RAIN logo.jpg

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.

மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:

என்ன : மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும்.

யார் : உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும்.

எப்படி : மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.

  • 1 மழைநீர் சேகரிப்பு - இந்தியா
  • 2 மழைநீர் சேகரிப்பு - வெளியிணைப்புகள்
  • 3 நடைமுறை அனுபவங்கள்
  • 4 Acknowledgements

மழைநீர் சேகரிப்பு - இந்தியா

how to save water essay in tamil

மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கிய முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு மாநிலம். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 50,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புக்கள் நிறுவப்போவதாக சென்னை நகர மேயர் 2014 மே 30-ம் தேதி அறிவித்தார். [1]

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4,000 தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல தெப்பக்குளங்களும் தூர்வாரி சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் தான் தற்போது உள்ளது.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சென்னை நகரில் உள்ள சுமார் 40 தெப்பக்குளங்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் மழைநீர் சேகரிப்புக்கு இந்த குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். [2]

மழைநீர் சேகரிப்பு - வெளியிணைப்புகள்

  • ப்லூவியா (மழை): ENERGY # “PLUVIA” :: RAIN USED TO ILLUMINATE LOW INCOME HOMES (MEXICO, 2014)
  • நீர் கோபுரங்கள்: Check Out These Amazing Towers In Ethiopia That Harvest Clean Water From Thin Air
  • Groasis waterboxx: Using 1 liter of water instead of 10!
  • bob® bag: bob® gives customers access to clean water.
  • மழைநீர் சேகரிப்பு தலையிணை: The Original Rainwater Pillow is an innovative rainwater & storm water harvesting system designed to be stored in horizontal wasted space.
  • Rainsoucer: Made in the U.S.A., the patent pending RainSaucer™ is a rain barrel accessory that allows you to harvest rainwater...

நடைமுறை அனுபவங்கள்

These projects are utilizing rainwater harvesting techniques and are part of the project listing in Really Simple Reporting (RSR) on Akvo.org .


WASH program in Rural Bangladesh

Scale up of Sustainable Water Access

Etude technique d’avant-projet

Rainwater harvesting for Nicolas School

Safe water supply for Fayaco, Senegal

Rainwater Harvesting Capacity Center

Support on WASH - in Miyo woreda

Upscaling CLTS for Healthy Communities

Partnership in WASH services delivery

Northern Region WASH Programme

Raising awareness on rainwater harvesting

Wetland Management & Water Harvesting

Rain Water Harvesting in Nepal

Rainwater Harvesting in Kenya

Rainwater harvesting in Guinee Bissau 2

Acknowledgements

Many of the tools, technologies, and projects on this page are courtesy of the Rainwater Harvesting Implementation Network .

RAIN is an international network with the aim to increase access to water for vulnerable sections of society in developing countries - women and children in particular - by collecting and storing rainwater.

Started in December 2003, RAIN focuses on field implementation of small-scale rainwater harvesting projects, capacity building of local organisations and knowledge exchange on rainwater harvesting on a global scale.

  • Rainwater Harvesting

Navigation menu

Personal tools.

  • Create account
  • View source
  • View history

WASH Portals

  • Sustainability
  • Decision & Assessment Tools

Data Libraries

  • Survey Library

Agriculture Portals

  • Sustainable Oil Palm Farming
  • Food & Nutrition Security

Theme Portals

  • Integrated Coastal Zone Management
  • Handbook on Data Collection
  • Practitioner's Tool
  • School Sanitation Stories
  • Accessible WASH Design
  • Emergency WASH

Miscellaneous

  • Watershed Definitions
  • Translations
  • Organisations
  • Recent changes
  • Special pages
  • What links here
  • Permanent link
  • Printable version
  • Page information

akvo.org

  • This page was last modified on 24 May 2017, at 23:46.
  • Content is available under Creative Commons Attribution-ShareAlike License unless otherwise noted.
  • Privacy policy
  • About Akvopedia
  • Disclaimers
  • Mobile view
  • Remove my personal data
  • Terms of service

Creative Commons Attribution-ShareAlike License

Essay on Save Water Save Life for Students and Children

500+ words essay on save water save life.

Water has become a highly necessary part of human being’s existence on Earth. Thus, the importance of water can be compared to the importance of air. All living organisms whether it is human, animals, or plants. Everyone is completely depending on fresh and potable water. Thus, essay on save water save a life is an insight into some of the unknown and important benefits of water for human beings. 

Essay on Save Water Save Life

Water is perhaps the second most important substance on Earth after the air. Apart from drinking, there are other benefits of water as well. Thus, it includes cooking, washing, cleaning, etc. Water is not a vital part of the human being’s survival. Also, it important for the survival of trees and plants. Additionally, it is a precious element required for the agricultural as well as various other industrial sectors. 

Currently, the biggest problem related to global warming is a huge water depreciation on Earth. This is mainly caused due to misuse of water happening at various places. In the current scenario, it is important to understand the formula for the conversation of water and thereby save water. Because pure water resources are the primary sources for all our necessities. And when it becomes depreciated, it can lead to huge catastrophic conditions for human beings. 

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Need to Save Water

Currently, there are many regions in the world that are facing extreme water scarcity due to deçline of groundwater and scanty rainfalls. Also, in some areas, the groundwater is contaminated or it has been overused. Thus, these factors have to lead to drought situations and in these areas it has lead to water scarcity. Furthermore, urbanization and industrialization have added to the problems where groundwater has been overused to fulfill the increasing demands of the population. 

According to the WHO report, 1 out of people does not have access to safe drinking water. Seeing this, the water crisis in the future does seem inevitable. Also, it calls for an immediate action plan in order to conserve water so that precious resource can be saved for today as well for future generations. 

Save Water Initiative

This initiative can help and promote the conservation of water . Also, it can be spread awareness among the people about the importance of water. Additionally, the save water campaign helps people realize that the sources of fresh and pure water are very limited. So, if it is overused that there are chances that they might not be able to fulfill the increasing demands of the population. Through this campaign, we can create awareness among the people about the benefits and preserving water and using it diligently.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

IMAGES

  1. Staggering Save Rain Water Essay In Tamil Language ~ Thatsnotus

    how to save water essay in tamil

  2. Save Earth Essay In Tamil

    how to save water essay in tamil

  3. Essay on water conservation in tamil language

    how to save water essay in tamil

  4. Save Water Poster In Tamil

    how to save water essay in tamil

  5. Save Water Essay In Tamil

    how to save water essay in tamil

  6. Save Water in Tamil Essay-தண்ணீர் பூமியின் அமிழ்தம் : அதை சேமிப்பது

    how to save water essay in tamil

VIDEO

  1. Save water speech in English ll Speech on save water in english ll Save water essay in English

  2. save water poem

  3. நாய் 5 வரிக் கட்டுரை

  4. 10 Lines On Water In English

  5. 10 points on Save Water| Essay on Save Water| Save Water Essay in English

  6. 10 line on Save Water In English || Easy on Save Water In English || Save Water

COMMENTS

  1. நீர் பற்றிய கட்டுரை

    நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai. மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது ...

  2. How To Save Water In Tamil

    பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானது தண்ணீர். நாம் ...

  3. நீர் பாதுகாப்பு

    நீர் பாதுகாப்பு முயற்சிகளின் நோக்கங்கள் பின்வருவனவற்றை ...

  4. Save Water in Tamil Essay-தண்ணீர் பூமியின் அமிழ்தம் : அதை சேமிப்பது

    Save Water in Tamil Essay-'நீரின்றி அமையாது உலகு' என்று கூறுவதில் இருந்து ...

  5. நீரின் முக்கியத்துவம்

    Importance of water in Tamil. நீர் நிலைகளை பாதுகாப்பது எப்போதும் மிக ...

  6. வீட்டில் நீரை எப்படி எல்லாம் சேமிப்பது: இதை படிங்க முதல்ல

    water tips summer தண்ணீர் கோடை English summary Above are tips to save water while crores of people in the world are struggling to get safe drinking water.

  7. மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர

    மழை நீர் இயற்கையின் கிஃப்ட். இந்த தூய நீரின் சேகரிப்பு ...

  8. Thanneer Katturai in Tamil

    Thanner Katturai- Water Essay. Two thousand years back, the most renowned Tamil poet Thiruvalluvar said, "The world cannot go on without water". For plants and animals to live on this earth, water is very much essential. Let us look at the importance of water in this essay. Over 50% of the human body is made of water.

  9. தண்ணீர் தட்டுப்பாடு தீர்வு/water scarcity/Tamil katturai/நதிகள் இணைப்பு

    Welcome to my channel YT tamizhini.This video is about how to save & protect water & water bodies. Simple tamil essay.Hope this video will be useful to you....

  10. இயற்கையை பாதுகாப்போம்

    Save nature in Tamil. பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் ...

  11. Water Saving Tips in Tamil

    மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் போன்றவை கோடையை சமாளிக்க ...

  12. நீர்

    முதற்பக்கம்; அண்மைய மாற்றங்கள்; உதவி கோருக; புதிய கட்டுரை ...

  13. Rain Essay in Tamil

    Rain Essay in Tamil - மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ...

  14. தண்ணீர் நம் உயிர் நீர்!

    Our reader Sujatha Boopathiraj has expressed her views on the Importance of Water. ... Subscribe to Oneindia Tamil. நம் உயிர் காக்க தண்ணீர் ...

  15. மழைநீர்ச் சேமிப்பு கட்டுரை மாதிரி-2

    மழைநீர் சேமிப்பு கட்டுரை, தமிழ் 10th கட்டுரை, 6th katturai, 7th katturai, 8th katturai, 9th katturai, 10th tamil katturai

  16. Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய

    Top 9 Benefits of Rice Water : சாதம் வடித்த கஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை ...

  17. Essay writing ll 10 lines on save water essay in tamil ...

    Jsj jesy education 😎Welcome to my channel ☺️Essay writing10 lines on save water10 lines on save water in tamilSave water#savewater#water#jsjjesyeducation#10...

  18. மழைநீர் சேகரிப்பு

    மழைநீர் சேகரிப்பு. (Article on Rainwater Harvesting in Tamil Language of India) மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து ...

  19. Water Conservation Essay for Students

    Answer 2: The government must plan cities properly so our water bodies stay clean. Similarly, water conservation must be promoted through advertisements. On an individual level, we can start by fixing all our leaky taps. Further, we must avoid showers and use buckets instead to save more water.

  20. நீர்நிலை

    நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை. நீர்நிலை (body of water) என்பது ...

  21. மழை நீர் சேகரிப்பு கட்டுரை,rain water harvesting essay writing in Tamil

    #essaywriting#rainwaterharvesting#rainwater

  22. Essay on Save Water for Students and Children

    Join courses with the best schedule and enjoy fun and interactive classes. In this essay on save water, we are going to discuss the problem of water and how we can save water and avoid its wastage. Also, water-saving is a universal responsibility of every person who lives on this earth. Read complete essay on save water here.

  23. Importance of Water Essay for Students and Children

    Water is the basic necessity for the functioning of all life forms that exist on earth. It is safe to say that water is the reason behind earth being the only planet to support life. This universal solvent is one of the major resources we have on this planet. It is impossible for life to function without water.

  24. Essay on Save Water Save Life for Students

    500+ Words Essay on Save Water Save Life. Water has become a highly necessary part of human being's existence on Earth. Thus, the importance of water can be compared to the importance of air. All living organisms whether it is human, animals, or plants. Everyone is completely depending on fresh and potable water.