- இன்றைய ராசி பலன்
- வார பலன் | Vara rasi palangal
- மாத பலன் | Matha rasi palan
- குரு பெயர்ச்சி பலன்கள்
- சனி பெயர்ச்சி பலன்கள்
- ராகு கேது பெயர்ச்சி
- ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
- தமிழ் கதைகள் | Tamil stories for reading
- சுவாரஸ்ய தகவல்கள்
- கடவுளின் அற்புதங்கள்
- சமையல் குறிப்புகள்
அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil
அன்னை தெரசா பற்றிய கட்டுரை | Annai Therasa varalaru
“அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்” என்கிற வரியை உதிர்த்தவர் “அன்னை தெரேசா”. யாருமே நெருங்கி சென்று சிகிச்சை அளிக்க தயங்கிய தொழு நோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்து புகழ்பெற்றவர் தான் அன்னை தெரேசா. அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப் புகழ் பெற்ற அன்னை தெரேசா வரலாறு (Annai Therasa history in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
அன்னை தெரசா
பெயர் | ஆக்னேஸ் கோன்யா போஜோஜியூ |
மருவிய பெயர் | அன்னை தெரசா |
பிறப்பு | ஆகஸ்ட் 26, 1910 |
பிறந்த இடம் | ஸ்கோப்பியே |
பெற்றோர் | நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ |
துணை | இல்லை |
பிள்ளைகள் | இல்லை |
பணி | சமூக சேவை |
சமயம் | கிறிஸ்தவம் |
தேசியம் | இந்தியர் |
இறப்பு | செப்டம்பர் 5, 1997 |
அன்னை தெரசா பிறப்பு
அன்னை தெரசா அவர்கள் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியில் மாசிடோனியா நாட்டில் இருக்கின்ற “ஸ்கோப்பியே” எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் நிக்கோலாய் போஜோஜியூ என்பதாகும் தாய் பெயர் ட்ரெனபிள் போஜோஜியூ என்பதாகும். இவருக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உடன் பிறந்தனர். அன்னை தெரசா பிறந்த போது அவருக்கே பெற்றோர் இட்ட பெயர் “ஆக்னேஸ் கோன்யா போஜோஜியூ” என்பதாகும். அன்னை தெரசா பிறந்த மறு தினமான ஆகஸ்ட் 27ஆம் தேதி அவருக்கு கிறிஸ்தவ சம்பிரதாயபடி பெயர் சூட்டபட்டது. எனவே அன்னை தெரசா ஆகஸ்ட் 27ஆம் தேதியையே தன்னுடைய பிறந்த நாளாக கருதினார். அன்னை தெரசாவிற்கு 8 வயதாக இருக்கும் பொழுது அவரது தந்தை காலமானார். தனது 18 வயது வரை தாயார் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரியுடன் வாழ்ந்து ஸ்கொப்பியே நகரில் வந்தார்.
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு (Annai Therasa history in Tamil)
சிறுவயதிலிருந்தே கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டு வளர்ந்த அன்னை தெரசா அவர்கள், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த சேவைகள் குறித்து கேள்விப்பட்டு, அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டார். அவருக்கு 12 வயதாக இருக்கும் பொழுது, தனது வாழ்க்கையை கிறிஸ்தவ மதத்திற்காகவும் பிறருக்கு சேவை புரிவதற்காகவும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என விரும்பி தன்னுடைய 18 ஆவது வயதில் அயர்லாந்து நாட்டில் இருந்த “சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ” என்கிற கிறிஸ்தவ மத அமைப்பில் கன்னியாஸ்திரியாக தன்னை இணைத்துக் கொண்டார்.
1929 ஆம் ஆண்டு தான் பணியாற்றிய கிறிஸ்தவ அமைப்பு மூலமாக முதன் முதலில் இந்தியாவிற்கு அன்னை தெரேசா வருகை தந்தார். டார்ஜிலிங் பகுதிக்கு அன்னை தெரசா சென்று தனது கிறிஸ்தவ மத பணிகளில் ஈடுபட்ட அதே நேரத்தில், வங்காள மொழியை நன்கு பேச, எழுத கற்றறிந்தார். பிறகு அதே பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிந்தார். 1937 ஆம் ஆண்டு கிறிஸ்தவ மத சம்பிரதாயத்தின் படி கன்னியஸ்திரியிலிருந்து அன்னை நிலையை அடைந்த தெரேசா அவர்கள் முதன் முதலாக தனக்கான கிறிஸ்தவ மத பெயராக “தெரசா” என்பதை தேர்ந்தெடுத்து சூட்டிக் கொண்டார்.
அன்னை தெரேசாவின் சமூக சேவை
ஆசிரியராக பணிபுரிந்து வந்தாலும் அன்னை தெரசா (Mother Teresa history in Tamil) தான் வாழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா நகரை சுற்றி இருந்த சேரி பகுதிகளில் நிலவிய வறுமையை கண்டு வருந்தினார். எனவே 1944 ஆம் ஆண்டு தான் செய்து வந்த ஆசிரியர் பணியில் இருந்து விலகிய அன்னை தெரேசா, ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காக 1946 ஆம் ஆண்டு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, செவிலியர் பணியை கற்றுத்தேர்ந்தார்.
1949 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மோதிஜில் என்கிற பகுதிக்கு சென்று அங்கிருக்கும் குழந்தைகளின் கல்வி தேவைக்காக பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தலானார். 1950 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைமை பேரவை அன்னை தெரேசாவிற்கு நிதி உதவி பெற்று சேவை செய்யும் கிறிஸ்தவ மத அமைப்பை தொடங்க அனுமதி வழங்கியது. பிறகு அதே ஆண்டு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் “நிர்மல் ஹ்ரிதை” என்கிற கிறிஸ்தவ அமைப்பை தொடங்கி கதைகள் ஏழைகள் நோயற்றவர்களுக்கு சேவைகளை செய்ய தொடங்கினார்.
கொல்கத்தாவின் சாந்தி நகர் என்கிற பகுதியில் தொழு நோயாளிகளுக்கான ஒரு மருத்துவ சேவை மையத்தை தொடங்கினார். தொழு நோயாளிகளுக்கு என இயங்கிய இந்த மருத்துவ சேவை மையம் பிற்காலத்தில் வெனிசுலா, தான்சானியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும் அன்னை தெரசாவின் கிறிஸ்தவ சேவை அமைப்பால் துவங்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டு பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரை முற்றுகையிட்டு கடுமையாக தாக்கியது இஸ்ரேலிய இராணுவம். அந்த முற்றுகையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாலஸ்தீனிய படைகளிடம் அன்னை தெரேசா அவர்கள் தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி, நகருக்குள் மாட்டிக்கொண்டு தவித்த 37 குழந்தைகளை காயம் இன்றி பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். 1988 ஆம் ஆண்டு அர்மேனியா நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தானே சென்று தன்னாலான உதவிகளை செய்தார்.
இப்படி உலகெங்கிலும் வறுமை, போர், பஞ்சம், பூகம்பம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்ட பொழுது பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக சென்று, தன்னுடைய சேவை அமைப்பின் மூலம் பல உதவிகளை செய்தார். 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி அன்னை தெரசா உருவாக்கிய “மிஷனரி ஆப் சாரிட்டிஸ்” என்கிற அமைப்பு உலகில் 120 நாடுகளில் செயல்பட்டு கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.
அன்னை தெரசா மனிதநேயம்
நோய் வறுமை போன்ற காரணங்களினால் துன்பப்படுகின்ற சிறு வயது குழந்தைகள், முதியோர்கள் போன்றவர்களின் துயரங்களை போக்க அன்னை தெரசா அவர்கள் தான் தொடங்கிய அமைப்பிற்கு தேவையான நிதியைப் பெற தினந்தோறும் வெளியில் சென்று காலை முதல் மாலை வரை பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ய செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்.
ஒருமுறை அன்னை தெரேசா அவர்கள் நிதி வசூலிக்க சென்று, ஒரு நபரிடம் நிதிக்காக கையேந்திய பொழுது அவர் கோபத்தில் அன்னை தெரசா அவர்களின் கைகளில் எச்சிலை காரி உமிழ்ந்தார். இதைக் கண்டு சுற்றிலும் நிறைந்தவர்கள் திகைத்தாலும், அன்னை தெரேசா அவர்கள் சிறிதும் கோபப்படாமல் அந்த எச்சில் துப்பிய நபரிடம் “நீங்கள் உமிழ்ந்த எச்சிலையை எனக்காக நான் வைத்துக் கொள்கிறேன். துயரப்படுகின்ற ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என கேட்க அந்த நபர் மிகவும் கூனிக் குறுகி, அன்னை தெரேசாவிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தன்னால் இயன்ற நிதி உதவியை அளித்தார்.
அன்னை தெரேசா சாதனைகள்
உலகிலேயே மனித குலத்திற்கு சேவைகள் செய்ததற்காக அதிக அளவு விருது பெற்ற நபராக அன்னை தெரேசா விளங்குகிறார். 1962 ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் சேவைகளை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு அவரின் சேவைகளை பாராட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சேசே அமைப்பு அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. 1969 ஆம் ஆண்டு சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவின் தலைமை குருவான போப் பன்னிரண்டாம் ஜான்பால் அமைதி விருது பெற்றார் அன்னை தெரசா. 1973 ஆம் ஆண்டு “டெம்பிள் ரன்” பரிசு அன்னை தெரசா பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஸ்வய்ட்டர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு டெரிஸ் அவார்ட் விருது வழங்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு மனித நேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான பால்சன் அமைதி விருது அன்னை தெரேசாவிற்கு வழங்கினர். 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் “பேட்ரோனல் மெடல்” என்கிற விருது மற்றும் அதே ஆண்டு மனித குல சேவைக்கான பிரிவில் விருதுகளில் மிக உயர்வாக கருதப்படுகின்ற நோபல் பரிசு அன்னை தெரேசாவிற்கு வழங்கி கௌரவித்தது ஸ்வீடன் அரசு.
1980 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அன்னை தெரேசாவுக்கு வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆப் மெரிட்” விருது. 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவின் “பிரசிடென்சியல் ஆப் மெரிட்” விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு அன்னை தெரசா அவர்கள் பிறந்த நாடான அல்பேனியா “கோல்டன் ஹானர் ஆஃப் த நேஷன்” எனப்படும் அல்பேனிய நாட்டின் உயரிய விருதை அன்னை தெரேசாவுக்கு வழங்கி அவரை கௌரவித்தது. 1995ஆம் ஆண்டு அன்னை தெரேசா அவர்கள் குரோஷியா நாட்டின் ராணி ஹெலினா விருது பெற்றார்.
அன்னை தெரேசா இறப்பு
தன் வாழ்நாள் முழுவதும் உலகெங்கிலும் இருந்த ஏழைகள், நோயாளிகளுக்கு ஓடோடி சென்று சேவை செய்த அன்னை தெரேசாவின் உடல் நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளானது. எனினும் தனது முதுமையின் காரணமாக 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் ஏற்படுத்திய கிறிஸ்தவ சேவை அமைப்பின் தலைமை பதவியில் இருந்து விலகினார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்னை தெரேசா அவர்கள் தனது 87 வது வயதில் மேற்குவங்க மாநிலம் தலைநகரான கொல்கத்தாவில் காலமானார்.
அன்னை தெரசா புனிதர் பட்டம்
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தின் பேராயர்கள் அல்லது கன்னியஸ்திரிகள் புனிதர் பட்டம் பெற, அவர்கள் இறந்த பிறகு அவர்களை வழிபடும் கிறிஸ்தவ பக்தர்களின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் பல கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களின் வாழ்வில் அன்னை தெரேசா அவர்களின் அருட்கடாசத்தால் அற்புதங்கள் நிகழ்ந்ததை குறித்து இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரத்தில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை பேரவைக்கு கிறிஸ்தவ மத தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில் அன்னை தெரேசா அவர்கள் இறந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள வாட்டிகன் சதுக்கத்தில், பல லட்சக்கணக்கான கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் முன்னிலையில் அன்னை தெரேசாவிற்கு அப்போதைய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.
English overview: Here we have Annai Therasa history in Tamil. We can also say Annai Therasa varalaru in Tamil or Mother Teresa history in Tamil or Annai Theresa biography in Tamil.
RELATED ARTICLES MORE FROM AUTHOR
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil
கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil
வள்ளலார் வாழ்க்கை வரலாறு | Vallalar history in Tamil
சமூக வலைத்தளம்.
தமிழ் கட்டுரைகள்
Katturai in tamil.
- [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
- [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
- [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்
- அன்னை தெரசா கட்டுரை
- Annai Teresa Katturai In Tamil
இந்த பதிவில் உலகையே அன்பினால் அரவணைத்த “ அன்னை தெரசா கட்டுரை ” பற்றி காணலாம்.
இவர் மறைந்தாலும் இவரது சேவைகளும் பணிகளும் என்றென்றும் போற்றப்படும். மறைந்தும் மறையாது வாழும் புனிதர் வழி நாமும் பிறர் மீது அன்பு கொள்வோம்.
குறிப்பு சட்டகம்
அன்னை தெரேசாவின் இந்தியா வருகை, அன்னை தெரேசாவின் சேவைகள்.
மனிதர்களுள் புனிதராய் வாழ்ந்தவர்கள் ஒருவரே அன்னை தெரேசா அவர்கள் ஆவர். கொல்கத்தா நகர வீதிகளில் தனது பணியைத் தொடங்கிய இவர் உலகம் முழுவதிலும் வாழும் கத்தோலிக்கர்களின் அன்னையாக மாறினார். இவரது சேவைக்கு ஈடு இணையே இல்லை எனலாம்.
அன்பு, நேசம், பாசம், கருணை இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் திகழ்ந்தவர் தான் அன்னை தெரேசா. அன்னை தெரேசா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அன்னை தெரேசா அவர்கள் அல்போனியா என்ற நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.இவர் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி அன்று நிக்கல் நிகோலா, பொஜாஜியூ திராணி பெர்னாயின் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்சா பெர்ஜனாக்கா என்பதாகும்.
இவர் 26 ஆகஸ்ட் 1910 இல் பிறந்த போதிலும்இ 27 ஆகஸ்ட் அன்று திருமுழுக்குப் பெற்றதால் இத்தினத்தையே தனது பிறந்த நாளாக கருதினார். தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தவர் பின் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
அன்னை தெரேசா அவர்கள் தனது பன்னிரண்டாவது வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். இந்தியாவின் மேற்கு வங்கப் பயணம் முடிந்து திரும்பிய அருட் சகோதரிகளின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினை பற்றித் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக துறவறம் பூண்டார்.
பின்னர் 1929 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்து அங்குள்ள ஏழைகளுக்கு உதவினார்.
கொல்கத்தாவில் தங்கியிருந்து அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலைவாய்ப்பில்லாத் திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதாரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்கள் போன்ற அனைத்து அவலங்களையும் கண்டு வருந்தினார்.
குழந்தைகளுக்கு அன்பு காட்டிப் பாடம் கற்பித்தார். அதுமட்டுமல்லாது குழந்தைகளை குளிப்பாட்டி, உணவு ஊட்டி அன்னை போல் கவனித்துக் கொண்டார்
பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டு பின் மக்களுக்கு சிகிச்சை அளித்தார். மருத்துவமனையை உருவாக்கி இலவச சிகிச்சைகளை வழங்கினார். பசியால் வாடியவர்களுக்கும் வீடு இன்றித் தவித்தவர்களுக்கும் உதவினார்.
1983ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை ரோம நகரில் சந்தித்த போது மாரடைப்பு ஏற்பட்டது.
பின்னர் 1989ஆம் ஆண்டு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இதயநோய் கோளாறால் அவதிப்பட்ட அன்னை தெரேசா அவர்கள் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
இவரது இறப்பைக் கண்டு கலங்காத கண்களும் கலங்கின. இவர் மறைந்தாலும் இவரது சேவைகளும் பணிகளும் என்றென்றும் போற்றப்படும். மறைந்தும் மறையாது வாழும் புனிதர் வழி நாமும் பிறர் மீது அன்பு கொள்வோம்.
அன்பிற்கு அன்னை தெரேசா என்று நாம் அடைமொழி கொடுக்கும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவ இவரின் இரக்க குணத்தையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தையும் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அன்பினால் உலகையே அரவணைத்த அன்னை உலகை விட்டு நீங்கினாலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றும் மக்களிடத்தில் நிலைத்து நிற்கின்றது.
You May Also Like:
- Annai Teresa In Tamil
- அன்னை தெரசா
All Copyright © Reserved By Tamil Katturai 2023
- Terms of Services
- Privacy Policy
- வேலைவாய்ப்பு
- குழந்தை நலன்
- இயற்கை விவசாயம்
- மாடித்தோட்டம்
- சொட்டு நீர் பாசனம்
- மெஹந்தி டிசைன்
- சமையல் குறிப்பு
அன்னை தெரசா அவர்களின் வாழ்க்கை வரலாறு
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு
இன்றைய கால நவீன உலகத்தில் தேவைப்படுவது பணம், பொருள் போன்றவை தேவைப்பட்டாலும் நாம் கவலையில் இருக்கும் போது பணத்தை கொடுத்து சந்தோசத்தை வாங்க முடியாது. அன்பு, பாசம், கருணை இவை அனைத்திற்கும் உதாரணமாக வாழ்ந்து, இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை தெரசா. இவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவலிந்து காட்டியவர், இவருடைய வாழ்க்கையை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு:
அன்னை தெரசா அவர்கள் தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910 -ம் ஆண்டு ஆகஸ்ட் 26 -ம் தேதி இவரது பெற்றோர்கள் பெயர்கள் நிக்கல் நிகோலா பொயாஜியூ திரானி என்பவர்களுக்கு மூன்றாவது மகளாக பிறந்தவர்.
இவருக்கு ஓரு சகோதரி, சகோதரன் உள்ளார்கள். சகோதரி பெயர் அகா, சகோதரன் பெயர் லாகஸ்.
அன்னை தெரசாவுக்கு எட்டு வயது இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். அதனால் இவரின் தாயார் அன்னை தெரசாவுக்கு நற்குணங்களை சொல்லி வளரத்தார்கள்.
நெல்சன் மண்டேலா வரலாறு..
தனது பள்ளி பருவத்தில் அனைவரையும் நகைசுவை உணர்வு உடையவராக இருந்தார்.
அன்னை தெரசா 12 -ம் வயதில் சேமிக்க சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பொறகு 18 -ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அன்னை தெரசா ‘ Sodality of children of Mary’ என்ற அமைப்பை சேர்ந்த லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை பணியாளராக இணைத்துக் கொண்டார்.
1929 -ம் ஆண்டு தான் வேலை செய்த கிறிஸ்துவ அமைப்பு மூலமாக தான் இந்தியாவிற்கு வந்தார். டார்ஜிலிங் பகுதிக்கு சென்ற அன்னை தெரசா வங்காள மொழியை கற்க ஆரம்பித்தார். அதே பகுதயில் ஆசிரியராக வேலை பார்த்தார்.
ஆசிரியராக வேலை பார்த்தாலும் அவர் வாழ்ந்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா பகுதியை சேர்ந்த மக்களின் வறுமையை நினைத்து கவலைப்பட்டார். அதனால் 1944- ம் ஆண்டு அவர் ஆசியறியார் பணியிலிருந்து விடைபெற்று ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 1946 -ம் ஆண்டு செவிலியர் பணியை கற்று கொண்டார்.
1949 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மோதிஜில் என்கிற பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி தேவைக்காக பள்ளி ஒன்றை தொடங்க நினைத்தார. 1950 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைமை பேரவை அன்னை தெரேசாவிற்கு நிதி உதவி பெற்று சேவை செய்யும் கிறிஸ்தவ மத அமைப்பை தொடங்க அனுமதி வழங்கியது. பிறகு அதே ஆண்டு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் “நிர்மல் ஹ்ரிதை” என்கிற கிறிஸ்தவ அமைப்பை தொடங்கி ஏழைகள் நோயற்றவர்களுக்கு சேவைகளை செய்ய தொடங்கினார்.
கொல்கத்தாவின் சாந்தி நகர் என்கிற பகுதியில் தொழு நோயாளிகளுக்கான ஒரு மருத்துவ சேவை மையத்தை தொடங்கினார். தொழு நோயாளிகளுக்கு என இயங்கிய இந்த மருத்துவ சேவை மையம் பிற்காலத்தில் வெனிசுலா, தான்சானியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும் அன்னை தெரசாவின் கிறிஸ்தவ சேவை அமைப்பால் துவங்கப்பட்டது.
தீண்டாமை மற்றும் தொழுநோய் மக்களை வாழ்க்கையை கஷ்டமாக்கியது. தொழுநோயாளிகளை தொட்டு தூக்க மறுக்கப்பட்டவர்களை அன்னை தெரசா அன்போடு அணைத்து கொண்டார்.
காமராஜர் வாழ்க்கை வரலாறு
விருதுகள் :
- 1962 – பத்மஸ்ரீ விருது
- 1972 – பன்னாட்டு புரிந்துணர்வுக்கான விருது
- 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
- 1680 – இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னாˮ விருது
- 1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை
- 2002 – அருளாளர் பட்டம்.
- ‘புனிதர்’ பட்டம், போப் பிரான்சிஸ் வழங்கியது
தன வாழ்நாள் முழுவதையும் எல்லா மக்களுக்காகவும், நோயாளிக்காகவும் உழைத்த அவரது உடலில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. 1997- ம் ஆண்டு செப்டம்பர் 5 -ம் தேதி 87 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்”
Related Posts
கண்ணகி வாழ்க்கை வரலாறு | kannagi history in tamil, கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு | karunanidhi history in tamil.., வைகாசி விசாகம் என்றால் என்ன. அதன் வரலாறு என்ன., அன்னையர் தினம் தோன்றிய வரலாறு...
நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.
கண்ணகி வாழ்க்கை வரலாறு | Kannagi Varalaru in Tamil சிலப்பதிகாரம் என்றால் முதலில் ஞாபகத்தில் வருவது கண்ணகிதான். சிலப்பதிகாரம் என பெயர் வருவதற்கு காரணம் கண்ணகி....
கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு | Karunanidhi History in Tamil..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அந்த வகையில் நிறைய நபருக்கு கதை புத்தகம் படிப்பது...
வைகாசி விசாகம் என்றால் என்ன | வைகாசி விசாகம் வரலாறு | Vaikasi Visakam in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகாசி விசாகம் என்றால்...
அன்னையர் தினம் வரலாறு | Mother's Day History in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்...
உழைப்பாளர் தின வரலாறு | May Day History in Tamil
மே தின வரலாறு தமிழ் | May 1 Labour Day History in Tamil நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள். அவர்களை கௌரவிக்கும்...
கோளறு பதிகம் வரலாறு | Kolaru Pathigam History in Tamil
Kolaru Pathigam History in Tamil அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் கோளறு பதிகத்தின் வரலாறு என்ன மற்றும் கோளறு பதிகத்தின் சிறப்புகள்...
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Recent Post
- (09.06.2024) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam
- இன்றைய ஹோரை நேரம் தமிழில் (09.06.2024)
- இன்றைய நல்ல நேரம் (09.06.2024) | Today Nalla Neram in Tamil
- வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil
- (09.06.2024) இன்றைய நாள் எப்படி..? | Indraya Naal Eppadi in Tamil | Tamil Calendar 2024 | Indraya Nalla Neram
- (09.06.2024) இன்றைய ராசி பலன்..! Indriya Rasipalan
- தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (09.06.2024)
- வெள்ளி விலை (09.06.2024) இன்றைய நிலவரம் 2024 | Today Silver Rate in Tamilnadu 2024 | Velli Vilai Today
- நாளைய ராசி பலன்
- நாளைய நாள் பஞ்சாங்கம் (10.06.2024)
- ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..!
- ஒரு விரல் மெஹந்தி டிசைன் | Mehndi Design for One Finger
Connect On Social Media
© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404
Welcome Back!
Login to your account below
Remember Me
Retrieve your password
Please enter your username or email address to reset your password.
புனிதர் அன்னை தெரசா! வாழ்விலிருந்து சில துளிகள்...
அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு
அன்னை தெரசாவிற்கு இன்று வாட்டிக்கனில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. அதன் வீடியோ
'அன்னை தெரசா' எனும் பெயரை 'அன்னை' எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. அந்தளவுக்கு நம் மனதில் வாழும் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் . அவரது வாழ்விலிருந்து சில துளிகள்...
இளமைப் பருவம்!
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார். தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார். தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன்னிரண்டு வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல், மருத்து வைத்து விடுதல் ஆகிய பணிகளைச் செய்ததும், அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்.
இந்திய வருகையும், 'தெரசா' பெயர் மாற்றமும்!
சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்த தெரசா, தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார். அதன்படி தாய், சகோதரி மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வந்த அண்ணனிடமும் சம்மதம் பெற்றார். வீட்டிலிருந்து விடுபட்டு 'Sodality of children of Mary' என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார். ஒருமுறை இந்தியாவின் மேற்கு வங்கம் பயணம் முடித்து திரும்பிய அச்சகோதரிகளின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினரை பற்றி தெரிந்துகொண்டார். பின்னர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக, துறவறம் செல்ல முடிவெடுத்தார். அதன்படி 1928-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி ராத் ஃபர்ன்ஹாம் (Rathfarnham) எனப்படும் அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்போதுதான் 'ஒரே தேவை, சேவை'. அதுவும் குழந்தைகள், பெரியவர்கள், ஏழைகள், நோயாளிகள் என பாரபட்சம் இன்றி எல்லோருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தார். பிறகு 1929-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். சட்ட விதிகளின்படி புதிதாக வந்து அங்கு சேருபவர், பெயரை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பிரான்ஸ் நாட்டின் சகோதரி 'தெரசா மார்டின்' ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு அவரது உடல்நிலை இடம்தராததால், 'காசநோயால்' தனது 24 வயதில் மரணித்தார். அவரது நினைவாக தனது பெயரை 'தெரசா' என மாற்றிக் கொண்டார்.
சேவையில் ஈடுபாடு!
* கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரசா, அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலையில்லா திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்களைக் கண்டு வருத்தம் கொண்டார். அச்சூழலில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகளிடம் அன்பு காட்டி பாடம் கற்பித்தார். சில காலங்களிலேயே 'இந்தியாதான் இனி என் தாய்நாடு' என முடிவெடுத்தார். இந்தி மொழியும் கற்றுக் கொண்டார். மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார். அங்கு கல்வியுடன், சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார். ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார். ஆசிரியையாக இருந்த தெராசா, பின்நாளில் பள்ளி முதல்வரானார். பதினேழு ஆண்டுகள் கல்வி பணியில் இருந்து, ஏராளமான நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.
* 1942-43 -ம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரும், விடுதலைப் போராட்டங்களும் உச்சத்தில் இருந்தது. மக்கள் பஞ்சத்தில் தவிப்பதைக் கண்டு அவர்களுக்கு அதிக நேரம் உதவி செய்ய நினைத்தார் தெரசா. ஆனால் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், கல்வி பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். 1948-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தன் விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அன்றுமுதல் முழு நேரமாக தன் சேவை பணியைத் தொடங்கினார். அன்றைய தினத்தில் ஐந்து ரூபாய் பணம், மூன்று நீல நிற சேலைகள்தான் அவரது சொத்தாக இருந்தது. குடிசையில் வசித்த மக்களைச் சந்தித்து, ஆறுதலாக பேசினார். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார். பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனைக்குச் சென்று தன் செவிலியர் பணியை மேம்படுத்திக் கொள்ள போதிய பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். பல விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அப்போது மருத்துவத் துறைக்குத் தேவையான 'உற்சாகம்', 'ஆர்வம்', 'பொறுப்பு' ஆகிய மூன்று நற்குணங்களையும் தெளிவுற கற்றுக்கொண்டார்.
* தெரசாவுடன் லொரேட்டாவின் முன்னாள் மாணவியர்கள் பத்து பேர் கொண்ட முதல்கட்ட சேவைக்குழு உருவாகி, மக்களுக்காக பணிசெய்ய தொடங்கியது. 1949-ல் கொல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை 'பள்ளிக்கூடம்' என்பதைத் தெரிந்துகொண்டார். சில காலங்களிலேயே ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார். மாணவர்களின் எண்ணிக்கையும் சீக்கிரமே அதிகரித்தது. சில காலங்களிலேயே நோயுற்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பெண்மணியை கண்டு மனம் உருகினார். உடனே, சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று உபரி மருத்துவ பொருட்களைத் தாருங்கள். பல ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டார். பல தரப்பிலும் இருந்து உதவிகள் கிடைத்தன.
* 1950-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' என்ற சபையைத் துவங்கி, பசியால் வாடும், வீடின்றி தவிக்கும், மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இருந்தும் ஆதரவற்றும் அடைகலம் இன்றியும் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கருணை இல்லம் ஒன்றை உருவாக்க ஆசைபட்டார். அரசின் உதவியுடன் 'காளிகட்' என்ற இடத்தில் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற முதியோர் கருணை இல்லத்தை ஆரம்பித்தார். பின்னாளில் அது, 'காளிகட் இல்லமானது'. அதே ஆண்டு ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்ற சேவை அறக்கட்டளையைத் தொடங்கி, நோய்வாய்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
* 1955-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி, ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார்.
* தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி, அதே ஆண்டு 'காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எஸ்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
* சிறை கைதிகளுக்கும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளுடன், ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்து வந்தார்.
* உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும், உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து, மருத்துவம் செய்து பராமரித்தார். அதனைக் கண்ட பலரும் 'ச்சீ' என சொல்லியதும் உண்டு. பதிலுக்கு 'ச்சீ' எனச் சொல்லி ஒதுங்கினால் காயம் குணமாகாது. அவர்களுக்கு பணிவிடை செய்வதுமட்டுமே தீர்வு என்பதையே பதிலாக கூறுவார்.
* இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளுக்கும் 'பிறர் அன்பின் பணியாளர்' சபையினை சேவைகளை விரிவுபடுத்தினார். அதன்படி 1965-ம் ஆண்டு வெனிசூலாவிலும், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சேவை மையங்களை நிறுவினார். சுதந்திரப் போராட்டங்கள், போர், உள்நாட்டு கலவரங்கள் என எந்த நாட்டில் மக்கள் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சென்று உதவிகள் செய்துவந்தார்.
சோதனைகளும் சாதனைகளும்!
* தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார். அவர் தெரசாவை கண்டும் காணாமலும் இருந்தார். தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார். கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை, தெரசாவின் கையில் துப்பினார். சற்றும் பொறுமையை இலக்காத தெரசா, இது நீங்கள், எனக்கு கொடுத்தது. பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும், அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிக்ச் செய்தார். இப்படி ஒவ்வொரு நாளும், பல வழிகளில் அவமானங்களையும், சங்கடங்களையும் சந்தித்துக்கொண்டுதான் சேவையாற்றி வந்தார். ஆனால் அவரது ஒரே நோக்கம், இவ்வுலகில் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் துன்பங்களைச் சந்திப்போர் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் என்னால் இயன்றவர்களுக்கு உதவி செய்யவே கடவுள் என்னைப் படைத்திருக்கிறார் எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.
* தெரசா உலகம் முழுக்க பலராலும் 'சிறந்த சேவகர்' எனப் பாராட்டப்பட்டாலும், விமர்சனக் கணைகளையும் சுமக்காமல் இல்லை. கருக்கலைப்பிற்கான எதிர்ப்பு, கொல்கத்தா நகரின் புகழையும் குலைத்து விட்டார் என ஏராளாமான விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். இது போதாத குறையாக இவரின் மருத்துவ சேவையின் தரம் மற்றும் நன்கொடையாக வரும் பணத்தை செலவு செய்யும் விதம் பற்றி ஊடகங்களுக்கும் பல விமர்சனங்களை தெரசாவின் மீது சுமத்தினார்கள். இவற்றை எல்லாம் தகுந்த முறையில் எதிர்கொண்டு, நேர்மையான முறையிலும், அகிம்சை முறையிலும் தன் சேவைப் பணியைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, 1969-ல் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஆவணப்படம் வெளிவந்த பிறகு, உலகம் முழுக்க பிரபலமானார்.
1983-ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை ரோம் நகரில் சந்தித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பலமுறை இருதயக் கோளாறுகளால் அவதிபட்டு வந்தார். அதனால் 1991-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனாலும் அந்த அமைப்பின் மற்ற அருட்சகோதரிகள் இவரைத் தலைமைப் பொறுப்பில் இருக்க வற்புறுத்தினர். ஆனால் கால் முறிவு, மலேரியா, இருதயக் கோளாறு என இவரது உடல்நிலை மோசமாகவே, 1997-ல் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகினார். 45 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றோர் எனப் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் சேவை புரிந்து வந்த தெரசா, 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். தெரசாவை, இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் 'அன்னை தெரசா'வாக அழைத்தனர்; அவரது சேவையைப் போற்றினர். அன்னை தெரசா மரணமடைந்த போது, உலகின் பல தரப்பட்ட மக்களின் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக அவர் மரணமடைந்த போது, அவரது 'பிறர் அன்பின் பணியாளர் சபை' 123 நாடுகளில் 610 சேவை மையங்களை இயங்கி வந்ததுடன், 4 ஆயிரத்தும் அதிகமான அருட்சகோதரிகளையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டும் இருந்தது.
பெற்ற விருதுகள்!
1962-ல் பத்மஶ்ரீ விருது.
1972 -ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது.
1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு.
1980- இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது.
1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை.
தவிர பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகள்.
இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள். 2003-ல் 'அருளாளர்' பட்டம் பெற்றார்.
* 2002-ம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸ் என்ற பெண் புற்றுநோய் கட்டியால் துன்பப்பட்டு வந்துள்ளார். அன்னை தெரசாவின் உருவம் பதித்த பதக்கத்தை அணிந்து, அவரை வணங்கியதால் அவரது உடல் பூரணமாக குணமடைந்துள்ளது. இந்த நிகழ்விற்காக 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு 'அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.
* பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனம் உருக பிரார்த்தனை செய்து வந்ததாகவும், அதனால் அவரது உடல் பூரண குணம் பெற்றதாகவும் கூறினர். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அங்கீகரித்துதான், அன்னை தேராசின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான இன்று (செப்டம்பர் 4-ம் தேதி) அவருக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியுள்ளார், போப் பிரான்சிஸ்.
அன்னை தெரசாவிற்கு அவர் வாழ்ந்த மதம் வழங்கும் உயரிய அங்கீகாரம், 'புனிதர் பட்டம்'. மக்களின் மனதில் அன்போடும், கருணையோடும் போற்றப்படுபவார். இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.
புனிதர் பட்டம்!
இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தேர்வுகள் தொடங்கும். நான்கு நிலைகளைக் கடந்து, அப்பட்டத்தினைப் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் 'புனிதர்' என நம்பப்படுவோர், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் முதல் நிலையான 'இறை ஊழியர்' (servant of god) என்ற பட்டம் வழங்கப்படும்.
* பிஷப்பினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இறந்த ஒரு நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும். அவர் நற்பண்புகளுடன் இருக்கிறார் என்று பரிந்துரை செய்யும் பட்சத்தில், அவருக்கு இரண்டாம் நிலையான 'வணக்கத்திற்குரியவர்'(venerable) என்ற பட்டம் வழங்கப்படும்.
* கிறிஸ்தவ நம்பிக்கையினைப் பின்பற்றி, சிறப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் எனவும், மற்றவர்களின் நலனுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராகவும், அற்புதம் (miracle) செய்பவராக இருக்கிறார் எனவும் உறுதி செய்து, மூன்றாம் நிலையான 'அருளாளர்' (முக்திப் பேறு) (blessed) பட்டம் வழங்கப்படும்.
* மேற்கண்ட மூன்று நிலைகளும் முடிந்த பின்னர் மீண்டும் ஓர் அற்புத நிகழ்வு நடந்தால் நான்காம் மற்றும் இறுதி நிலையான 'புனிதர் பட்டம்' (saint) வழங்கப்படும். இவ்விருது வழங்கப்படும் இறந்த மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியிலில் சேர்க்கப்படுவார்.
- கு.ஆனந்தராஜ்
- mother teresa
- தன்னம்பிக்கைக்கதை
- motivation story
- அன்னை தெரசா
அன்னை தெரசா பொன்மொழிகள் | Mother Teresa Quotes in Tamil
இந்த பதிவில் நாம் அன்னை தெரசா பொன்மொழிகள் (Mother Teresa Quotes in Tamil) பற்றி காணலாம்.
அன்னை தெரசா பொன்மொழிகள்
அமைதி, புன்னகையில் இருந்து தொடங்குகிறது.
நீங்கள் மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டே இருந்தால், அவர்கள் நேசிக்க உங்களிடம் நேரம் இருக்காது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரைப் பார்த்து சிரிக்கும்போது, அது அன்பின் செயல், அந்த நபருக்கு ஒரு பரிசு, இது அழகான விஷயம்.
அன்னை தெரசா தத்துவங்கள்
நேற்று போய்விட்டது, நாளை இன்னும் வரவில்லை, இன்று மட்டுமே நம்மிடம் உள்ளது.
பிறருக்காக வாழாத வாழ்க்கை, ஒரு வாழ்க்கை அல்ல.
அன்பான வார்த்தைகள் சுருக்கமாகவும் பேசுவதற்கு எளிதாகவும் இருக்கலாம், ஆனால் அவற்றின் எதிரொலிகள் உண்மையிலேயே முடிவற்றவை.
அப்துல் கலாம் பொன்மொழிகள்
நமக்கு அமைதி இல்லை என்றால், அதற்கு காரணம் நாம் ஒருவரும் சொந்தம் என்பதை மறந்துவிட்டதால் தான்.
உலக அமைதியை மேம்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசிக்கவும்.
என்னால் மட்டும் உலகை மாற்ற முடியாது, ஆனால் கடலின் குறுக்கே ஒரு கல்லை எறிந்து பல அலைகளை உருவாக்க முடியும்.
அன்னை தெரசா கவிதைகள்
சோற்றுக்கான பசியை விட, அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.
நீங்கள் பணிவுடன் இருந்தால், எதுவும் உங்களைத் தொடாது, புகழ்வோ அல்லது அவமானமோ இல்லை, ஏனென்றால் நீங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
உங்களால் முடியாததை என்னால் செய்ய முடியும், என்னால் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியும்; ஒன்றாக நாம் இருந்தால் பெரிய விஷயங்களை செய்ய முடியும்.
அன்னை தெரசா வரிகள்
தலைவர்களுக்காக காத்திருக்காதே, தனியாகவே செய், நபருக்கு நபர்.
நாம் அனைவராலும் பெரிய விஷயத்தை செய்ய முடியாமல் இருக்கலாம், ஆனால் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்யலாம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, கொடுப்பதில் எவ்வளவு அன்பு செலுத்துகிறோம் என்பதில் இருக்கிறது.
சே குவேரா பொன்மொழிகள் | Che Guevara Quotes in Tamil
25 Bharathiyar Quotes in Tamil | பாரதியார் பொன்மொழிகள்
25 Best Periyar Quotes in Tamil | தந்தை பெரியார் பொன்மொழிகள்
20 Best Abdul Kalam Quotes in Tamil | அப்துல் கலாம் பொன்மொழிகள்
15 ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் | Abraham Lincoln Quotes in Tamil
15 Swami Vivekananda Quotes in Tamil | சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
- அழகு..அழகு..
- ஆரோக்கியம்
- தாய்மை-குழந்தை நலன்
- உலக நடப்புகள்
- வீடு-தோட்டம்
- Click on the Menu icon of the browser, it opens up a list of options.
- Click on the “Options ”, it opens up the settings page,
- Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
- Scroll down the page to the “Permission” section .
- Here click on the “Settings” tab of the Notification option.
- A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
- Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
அன்னை தெரசா பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
அன்னைத் தெரசா சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அன்பை வாரி வழங்கினார்..
யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் இதே நாள் 1910 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆக்னஸ் . இளவயதிலிருந்து படிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவரான இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். இதனால் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். யாரிந்த ஆக்னஸ்? இது பெற்றோர் வைத்தப் பெயர். அவருக்கு மக்கள் வைத்தைப் பெயரைச் சொன்னால் சட்டென உங்களுக்குத் தெரிந்து விடும். ஆக்னஸுக்கு நாம் வைத்த பெயர் 'அன்னை தெரசா' அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.
எந்த நாள் பிறந்தநாள் ? :
ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும், தான் திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார். இளவயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமை சூழலில் தான் வளர்ந்தார் ஆக்னஸ் .
Image Courtesy
சிறிய பென்சில் :
அன்னைத் தெரசா தன்னைப் பற்றிக்குறிப்பிடும் போது, அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்பார்.
தெரசா பெயர்க்காரணம் :
1929 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தடைந்தார் ஆக்னஸ். அங்கே இருக்கும் விதிகளின் படி, புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர்.
அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்' காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவர்களது நினைவாக தனது பெயரை "தெரசா" என்று மாற்றிக் கொண்டார்.
மருத்துவப் பயிற்சி :
தன்னை "செவிலியர்" பணியில் மேம்படுத்திக் கொள்ள விரும்பிய தெரசா அதற்காக பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். அங்கு அவர் பலவிதமான நோய்கள் பற்றியும், அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் முறையாக கற்றுக் கொண்டார்.
முதல் குழு :
தெரசாவின் சிஷ்யைகள் பத்துப் பேரைக் கொண்ட முதல் சேவைக்குழு உருவானது. சமூக சேவைகளுக்கான ஆரம்பம் பள்ளிக்கூடம் கட்டுவதுதான் தனது முதல் நோக்கமாகக் கொண்டு, 1949-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர்.
அது பல பகுதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், ஏழைகளும் ஒன்றாக வசித்த பகுதி. முதல் கட்டமாக அங்குள்ள ஏழைக்குழந்தைகள் பற்றிய தகவல்களை குறித்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்தார்.
அவர்களின் ஆதரவுடன், முதலில் வெறும் 5 குழந்தைகளுடன் கரும்பலகை கூட இல்லாமல் தண்ணீர்த் தொட்டியின் நிழலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் குறுகிய நாட்களில் மெல்ல மெல்ல எண்ணிக்கை உயர்ந்து 46 குழந்தைகளை எட்டியது.
மருத்துவமனை :
நோயால் தனது வீட்டின் வாசற்படியில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றும், பண வசதி இல்லாத கால தாமதத்தால் அந்த பெண் இறக்க நேரிட்டாள். இந்த ‘கோர சம்பவத்தை' அனுபவித்த அன்னை தெரசா "சிறிய அளவில் மருத்துவமனை" ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.
அக்டோபர் 7, 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை துவங்கினார். இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார்.
காளிகட் இல்லம் :
கவனிப்பார் இல்லாமல், வாரிசுகளால் புறக்கணிக்கப்படுகின்ற முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார் அன்னை தெரசா. அரசாங்க உதவியுடன் ‘காளிகட்' என்னுமிடத்தில் ஹீக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற "நிர்மல் ஹ்ருதய்" என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் "காளிகட் இல்லம்" என்றானது.
செப்டம்பர் 23, 1955-ம் ஆண்டு முதன் முறையாக சிசுபவன் ஆரமப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டி மற்றும் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என அனைவரும் இந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
தொழு நோயாளிகளுக்கு :
1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். இங்கு இலவசமாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
இதற்கு "காந்தி பிரேம் நிவாஸ்" என்று பெயரிடப்பட்டது. மேலும் "தொழுநோயாளிகளின் தினம்" என்ற ஒன்றை அறிவித்து அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார்.
போப் கார் ஏலத்தில் :
அன்னைத் தெரசா யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம்.ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.
சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்.
அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம் இது.
உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.
மார்ச் 13, 1997-ல் அறக்கட்டளையின் பொறுப்புக்கள் அனைத்தையும் நிர்மலாவிடம் ஒப்படைத்து விட்டு சாதாரண தொண்டராகவே தனது பணியினை தொடர்ந்தார் அன்னை தெரசா.
ஆசிர்வதிக்கப்பட்டவர் :
கிருஸ்துவ மரபின்படி ஒருவர் இறந்த பிறகு அடுத்த ஐந்து வருடங்களில் ஏதாவது ஒரு அதிசயம் அவரது பெயரில் நிகழ்ந்தால் "ஆசிர்வதிக்கப்பட்டவர்" என்ற பட்டம் வழங்கப்படும். அதன் படி இங்கு பெர்ஸா என்ற பெண்மணி வயிற்று வலியால் துடித்ததாகவும், அன்னைத் தெரசாவின் படத்தை வயிற்றில் வைத்தவுடன் வலி குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, அக்டோபர் 19, 2003-ல் வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் 3 இலட்சம் பேர் முன்னிலையில் தெரசாவுக்கு ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, சர்வதேச புரிந்துணர்வுக்கென ஜவஹர்லால் நேரு விருது,
1973-இல் டெம்பில்டன் விருது, 1977 ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது,
1982 ல் பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம், சுதந்திரத்திற்கான பிரசிடன்ஸியல் விருது,
1996ல் அமெரிக்காவின் கௌரவப் பிரஜை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
வேறொரு நாட்டில் பிறந்த இந்தியப் பிரஜையாக இறந்த ஒரே நபர் அன்னைத் தெரசா மட்டுமே. இவரது இறப்பிற்கு முழு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
More INSYNC News
Life history of mother Theresa
பெண்களே உங்கள் முகத்தை பளிச் பளிச் என வைத்துக்கொள்ளணுமா? இதை ட்ரை பண்ணுங்கள்..!
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
உளுத்தம் பருப்பையும், வெங்காயத்தையும் வெச்சு ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு நல்லா இருக்கும்..
- Don't Block
- Block for 8 hours
- Block for 12 hours
- Block for 24 hours
- Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am
- Our policies
- _Privacy policy
- _Disclaimer
- _Terms and Conditions
அன்னை தெரேசாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்
நம் அனைவருக்கும் கிடைத்தது ஒரே ஒரு வாழ்க்கை அதை நமக்காக வாழ வேண்டும் என்பார்கள், ஆனால் தனக்குக் கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையையும் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தவர் தான் அன்னை தெரேசா (Mother Teresa). படைதிரட்டி இந்த உலகை வெல்ல முயன்றவர் பலர் ஆனால் தன் பாசத்தாலேயே உலகை வென்றவர் தான் அன்னை தெரேசா
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன். வள்ளுவனின் குறலுக்கு எடுத்துக்காட்டாய் தன் உடல், பொருள், ஆவி முழுவதையும் பிறருக்கு உதவுவதிலேயே செலவிட்டவர் அன்னை தெரேசா (Mother Teresa). இப்படி அன்பின் மறுவடிவமாய் வாழ்ந்த அன்னை தெரெசாவின் பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
iOS App Link
Android App Link
Mother Teresa quotes in Tamil
- உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது.
- மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும்.
- நீங்கள் ஒருவரைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு முறையும், அது ஒரு அன்பான செயல், அந்த நபருக்கு அது ஒரு பரிசு, ஒரு அழகான விஷயம்.
- சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள். சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள்.
- உங்களால் செய்ய முடியாத விடயங்களை என்னால் செய்ய முடியும், என்னால் செய்ய முடியாத விடயங்களை உங்களால் செய்ய முடியும், நாம் ஒன்றாகச் சேர்ந்து சிறந்த விடயங்களைச் செய்ய முடியும்.
- நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. எங்களுக்கு இன்று மட்டுமே உள்ளது.
- நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
- அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது.
- இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். ஒவ்வொரு கணமுமே நமக்குத் தேவையானது, அதற்கு மேல் தேவையில்லை.
- நான் பெரிய விடயங்களைச் செய்யவில்லை. சிறிய விடயங்களை மிகுந்த அன்போடு செய்கிறேன்.
- மகிழ்ச்சிக்குச் சாவி எதுவும் இல்லை, கதவு எப்போதும் திறந்தே உள்ளது.
- சாதாரண விஷயங்களை அசாதாரணமான அன்புடன் செய்யுங்கள்.
- உடல் நோய்களை நாம் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும், ஆனால் தனிமை, விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றிற்கான ஒரே சிகிச்சை அன்பு மட்டுமே. ஒரு துண்டு ரொட்டிக்காக இறக்கும் பலர் இந்த உலகில் உள்ளனர், ஆனால் ஒரு சிறு அன்புக்காக இன்னும் அதிகமானோர் இறக்கின்றனர்.
- ஒரு எளிய புன்னகையால் செய்யக்கூடிய எல்லா நன்மைகளையும் நாங்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை.
- என்னால் தனியாக இந்த உலகை மாற்ற முடியாது, ஆனால் பல சிற்றலைகளை உருவாக்க தண்ணீருக்குள் ஒரு கல்லை எறிய முடியும்.
- மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது.
- வாழ்க்கை ஒரு வாய்ப்பு, அதிலிருந்து பயனடையுங்கள். வாழ்க்கை ஒரு அழகு, அதைப் போற்றுங்கள். வாழ்க்கை ஒரு கனவு, அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவி செய்யும் கைகள் சிறந்தது.
- இந்த உலகின் சிக்கல் என்னவென்றால், நாங்கள் எங்கள் குடும்பத்தின் வட்டத்தை மிகச் சிறியதாக வரைகிறோம்.
- நீங்கள் நினைப்பதை விட நீங்கள் சிறந்தவர்.
- மென்மையாகப் பேசுங்கள், உங்கள் முகத்தில், உங்கள் கண்களில், உங்கள் புன்னகையில், உங்கள் அரவணைப்பில் கருணை இருக்கட்டும். எப்பொழுதும் மகிழ்ச்சிப் புன்னகையுடன் இருங்கள். உங்கள் அக்கறையை மட்டுமல்ல உங்கள் இதயத்தையும் கொடுங்கள்.
- அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.
- இந்த உலகை வெல்வதற்கு நாங்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம்.
இடுகையிட்டது Tamil Motive
Popular posts.
கல்வியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
கல்வியைப் பற்றிய பொன்மொழிகள் மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம்…
இசையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
இசையைப் பற்றிய பொன்மொழிகள் இசை (Music) இது சிலருக்கு போதை மருந்து, சிலருக்…
தலைமைத்துவத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
தலைமைத்துவத்தைப் பற்றிய பொன்மொழிகள் தலைவன் (Leader), தலைமைத்துவம் (Leaders…
- அரசியல் தலைவர்கள் (10)
- ஆன்மீகவாதிகள் (6)
- இசைக்கலைஞர்கள் (2)
- இயக்குனர்கள் (1)
- இராஜதந்திரி (1)
- எழுத்தாளர்கள் (13)
- ஓவியர்கள் (2)
- கவிஞர்கள் (9)
- சமூக சேவகர்கள் (2)
- தத்துவஞானிகள் (16)
- தற்காப்புக் கலைஞர்கள் (3)
- தொழில்நுட்ப வல்லுநர்கள் (3)
- நடிகர்கள் (7)
- நாடக ஆசிரியர்கள் (4)
- பணக்காரர்கள் (5)
- புரட்சியாளர்கள் (5)
- பொருளியலாளர்கள் (2)
- மருத்துவர்கள் (1)
- மனோதத்துவ நிபுணர்கள் (1)
- மாவீரர்கள் (2)
- விஞ்ஞானிகள் (11)
- விளையாட்டு வீரர்கள் (2)
Most Recent
Recent in topics, most popular.
கார்ல் மார்க்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள் ஜெர்மனியைச் (German) சேர்ந்த தத்துவஞானியும்,…
Social Widget
Essay on Mother Teresa for Students and Children
500+ words essay on mother teresa.
Essay on Mother Teresa: There are many humanitarian in the history of the world. Out of the blue, Mother Teresa stood in that crowd of people. She is a lady of great caliber who spends her whole life serving the poor and needy people. Although she was not an Indian still she came to India to help its people. Above all, in this essay on Mother Teresa, we are going to discuss the various aspects of her life.
Mother Teresa was not his actual name but after becoming a nun she received this name from the church after the name of St. Teresa. By birth, she was a Christian and a great believer of God. And due to this reason, she chooses to become a Nun.
The Beginning of Mother Teresa’s Journey
Since she was born in a Catholic Christian family she was a great believer of God and humanity. Although she spends most of her life in the church she never imagines herself to be a nun one day. When she visited Kolkata (Calcutta), India after completing her work in Dublin her life completely changed. For 15 consecutive years, she enjoyed teaching children.
Along with, teaching school children she worked hard to teach the poor kids of that area. She started her journey of humanity by opening an open-air school where she started teaching poor children. For years she worked alone without any funds but still continues to teach students.
Her Missionary
For doing this great work of teaching poor and helping needy people she wants a permanent place. This place will serve as her headquarters and a place where poor and homeless can take shelter.
So, with the help of the church and the people, she established a missionary where poor and homeless can live and die in peace. Later on, she manages to open several schools, homes, dispensaries, and hospitals through her NGO both in India and overseas countries.
Get the huge list of more than 500 Essay Topics and Ideas
Death of Mother Teresa and Memorial
She was an angel of hope for the people but death spares no one. And this gem died serving people in Kolkata (Calcutta). Also, on her death the whole nation shred tears in her memory. With her death the poor, needy, homeless, and weak again become orphans.
Many memorials were made in her honor by the Indian people. Apart from that, foreign countries also make several memorials to give tribute to her.
In conclusion, we can say that in the beginning, it was a difficult task for her to manage and teach poor children. But, she manages those hardships delicately. In the beginning, of her journey, she uses to teach poor kids using a stick by writing on the ground. But after years of struggle, she finally manages to arrange the necessary things for teaching with the help of volunteers and some teachers.
Later on, she established a dispensary for poor people to die in peace. Due to her good deeds, she earns great respect in the heart of Indians.
{ “@context”: “https://schema.org”, “@type”: “FAQPage”, “mainEntity”: [{ “@type”: “Question”, “name”: “What was the Real name of Mother Teresa which her parents gave her?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”: “Although everyone calls her Mother Teresa and she was popularly known as ‘saint of our times’ but her real name was Agnes Gonxha Bojaxhiu.” } }, { “@type”: “Question”, “name”: “What is Mother Teresa famous for?”, “acceptedAnswer”: { “@type”: “Answer”, “text”:”She is famous for her work which she has done in Kolkata (Calcutta), India where she worked with outcasts, lepers, and the homeless. Besides, she is a person of great faith and humbleness.”} }] }
Customize your course in 30 seconds
Which class are you in.
- Travelling Essay
- Picnic Essay
- Our Country Essay
- My Parents Essay
- Essay on Favourite Personality
- Essay on Memorable Day of My Life
- Essay on Knowledge is Power
- Essay on Gurpurab
- Essay on My Favourite Season
- Essay on Types of Sports
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Download the App
Essay On Mother Teresa
“The hunger of love is much more difficult to remove than the hunger for bread”
The world has witnessed many humanitarians but none as selfless as the great Mother Teresa. A non-native of the country, Mother Teresa devoted her life to the people of India. She made it the purpose of her life to feed the hungry, help the needy, and tend to sick people who were shunned by society. Her life was not an easy one but she was determined in her will to serve the poor and accomplish her purpose of serving the almighty.
Fill Out the Form for Expert Academic Guidance!
Please indicate your interest Live Classes Books Test Series Self Learning
Verify OTP Code (required)
I agree to the terms and conditions and privacy policy .
Fill complete details
Target Exam ---
Birth and Beginnings:
Born as Agnes Gonxha Bojaxhiu in the Ottoman Empire, Mother Teresa found her inner calling at a very young age. She came from a wealthy family and her father was a prominent politician. Her mother was a deeply religious person who taught a young Agnes about the importance of loving the Lord and following the life of simplicity. Mother Teresa was a devout Catholic and used to attend church with her family very often. It was while attending these sermons and services that she realized that she wanted to become a nun and spend her life looking after people in need. Mother Teresa made a decision to join the church at 12 and she left her house at the tender age of 18. It is said that once Mother Teresa left her house, she never met her family again.
Her journey towards Spirituality :
Mother Teresa joined the Sister of Loretto, a Catholic Irish group of sisters who were heading to India. Since Mother Teresa only knew her native tongue Serbian, she had to learn English to communicate with her peers. On reaching India, she joined a convent school as a nun and a teacher. Mother Teresa loved spending time with children but teaching the privileged children in the school did not provide her the peace she was looking for. Her heart ached for the children she saw on the streets, begging for the most basic of amenities. To resolve this inner turmoil, Mother Teresa opened an evening school for the depraved. She would gather all the poor children from the streets of Calcutta and teach them. It was this that gave her joy and brought her near to God. Although her intentions were pure, the task was a herculean one. Not a lot of children were interested in getting an education when they had bigger issues of hunger and health back home. Mother Teresa realized that she had a greater duty towards the people of the slums and roads than the monastery and so she decided to quit the organisation.
Indian Citizenship:
Mother Teresa opted for Indian citizenship in 1948 and made it the sole purpose of her life to serving her fellow people. In the year 1950, she established the Missionaries of Charity for the very same purpose. She wanted to directly feed and help the needy and so she decided that the best way to do that was if she gave up her comfortable life in the convent. She started living in the slums and would walk all day, in scorching heat or bone-chilling cold, asking for food and donations for the needy. The road she had taken was a desolate and lonely one. Not a lot of people took a nun clad in a white saree with blue stripes seriously but Mother Teresa was determined in her vision. Gradually people began taking notice of her noble deeds and the Missionaries of Charity started gaining recognition. A number of sisters and nuns became a part of the order and the group started receiving better help and fundings.
Work in Kolkata:
Mother Teresa established the ‘Kalighat Home for the Pure Heart’ or the ‘Nirmal Hriday’ to look after the people who were suffering a miserable fate. She believed that every person should be bestowed with a respectable death and that’s what she did. Any ailing person was accepted in the institution and if they met an unfortunate death, Mother Teresa ensured that they were given a proper funeral according to their faith. Mother Teresa also worked relentlessly for the people suffering from leprosy and AIDS. She did not let the prejudice of the society affect her in any way and would tend to these people personally. She also opened a special hospice called ‘Shanti Nagar’ for the very purpose.
Conclusion : It was her selflessness and empathy towards the people that earned her the title of ‘Saint of Our Times’. She was awarded the highest civilian award, the Bharat Ratna, in 1980 and the Nobel Peace Prize in 1979. She did not believe in any external rewards but was gracious enough to accept them and spent all the reward funds in helping others. The Missionaries of Charity today is a conglomerate of 160 centers in India and abroad. Mother Teresa took her last breath on the 5th of September, 1997. Her death was a personal loss to every Indian as she gave her life to the people. Until her very last days, she kept helping the ‘poorest of the poor. She made the world believe that those who are serving the poor are serving God.
Related content
Talk to our academic expert!
Language --- English Hindi Marathi Tamil Telugu Malayalam
Get access to free Mock Test and Master Class
Register to Get Free Mock Test and Study Material
Offer Ends in 5:00
- Short Essay On Mother Teresa In Tamil
Related Essay Topics
- Mother Tongue Essay
- Essay On Mother
- My Mother Essay
- Which Type Of Essay Is Amy Tan's Mother Tongue
- Mother Teresa Essay
- Amy Tan Mother Tongue Essay
- Best Essay On Mother In English
- Disadvantages Of Working Mothers Essay
- Essay About My Mother Spm
- Essay On My Mother In Marathi For Class 8
- Essays About Admiring Your Mother
- Helping Mother In Kitchen Essay
- I Admire My Mother Essay
- Importance Of Mother Essay
- Importance Of Mother Tongue Essay In Hindi
- Mother Jones Photo Essays
- Mother Nature Essay
- Mother To Mother Novel Essay
- My Ideal My Mother Essay
- My Mother Essay In Odia Language
- Narrative Essay About Mother
- The Main Theme Of This Essay Mother Tongue Suggests That
- 10 Lines On My Mother Essay
- 10 Sentences On My Mother Essays
- An Essay On Mother Teresa In Hindi
- Being A Mother For The First Time Essay
- Correcting My Mothers Essay
- Describing A Person Essay My Mother
- Descriptive Essay About Mother
- Dorothea Lange Migrant Mother Essay
- Essay About Destruction Of Mother Earth
- Essay Explain How Your Mother Has Influenced Your Life
- Essay On How I Help My Mother At Home
- Essay On Mother For Class 2
- Essay On Mother In Gujarati Language
- Essay On Mothers Love In English
- Essay On Mothers Love In Hindi
- Essay On My Mother In Urdu
- Greatness Of Mother Essay In Telugu
- How To Save Mother Nature Essay
- I Love My Mother Essay
- Importance Of Mother Tongue Essay In Malayalam
- Mother Earth Essay Wikipedia
- Mother Nature Easy Essay
- Mother Nature Essay In English
- Mother's Sacrifice For Her Child Essay
- Mother To Son Poem Essay
- Mother Tongue Amy Tan Summary Essay
- My Ideal Mother Essay
- My Loving Mother Essay
- My Mother Essay In French
- Praise Song For My Mother Essay
- Save Mother Earth Essay In English
- Save Mother Earth Essay Wikipedia
- Studymode Kannada Essay About Mother
- Teenage Mother Essay
- The Joy Luck Club Mother Daughter Relationships Essays
- Write A Descriptive Essay About Your Mother
- A Essay On My Mother
- A Person I Admire My Mother Essay
- Anna Quindlen Mothers Essay
- Best Essay On Mother
- Essay About Hero My Mother
- Essay On Daily Routine Of My Mother
- Essay On Mother In Arabic
- Essay On Mother In Bengali Language
- Essay On My Mother In French
- Essay On My Mother In German Language
- Essay On My Mother In Hindi For Class 9
- Essay On Relationship Between Mother And Child
- Essay On The Topic My Mother
- Essay Writing In English My Mother
- How Do You Help Your Mother At Home Essay
- I Admire My Mother The Most Essay
- Importance Of Mother In Life Essay
- Joy Luck Club Mother Daughter Relationships Essay
- Love Mother Nature Essay
- Mother Any Distance Essay
- Mother Biography Essay
- Mother Earth Speech Essay
- Mother Essay In English
- Mother's Day Essay Writing
- Mother Tongue Essay Questions
- My Hero My Mother Essay
- My Mother Essay For Class 10
- My Mother Is The Best Essay
- Necessity Is The Mother Of Invention Essay In English
- Relationship Between Mother And Daughter Essay
- Revolutionary Mothers Essay
- Role Of Mother In Our Life Essay
- Short Essay On Mother For Kids
- Short Essay On Mother Teresa In Hindi
- Stay At Home Vs Working Mothers Essays
- The Difference Between My Mother And Grandmother Essay
- The Love Of A Mother Essay
- The Person I Admire The Most Is Mother Teresa Essay
- The Problem Of Working Mother Essay
- About Mother India Essay
- Beautiful Essay On Mother
Results for mother teresa in tamil essay translation from English to Tamil
Computer translation.
Trying to learn how to translate from the human translation examples.
mother teresa in tamil essay
From: Machine Translation Suggest a better translation Quality:
Human contributions
From professional translators, enterprises, web pages and freely available translation repositories.
Add a translation
essay mother teresa in tamil
அன்னை தெரேசா வரலாறு
Last Update: 2016-11-06 Usage Frequency: 4 Quality:
essay mother teresa in tamil story
தமிழ் கதை கட்டுரை அன்னை தெரேசா
Last Update: 2017-01-31 Usage Frequency: 1 Quality:
essay mother teresa social service in tamil
கட்டுரை தாய் தெரசா சமூக சேவை தமிழில்
Last Update: 2020-01-19 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
thiruvalluvar in tamil essay
தமிழ் கட்டுரையில் திருவள்ளுவர்
Last Update: 2015-09-25 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous
mother teresa
அன்னை தெரேசா
Last Update: 2016-06-23 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous
pudhumai penn in tamil essay
தமிழ் கட்டுரையில் புத்துமயிரை எழுதுகிறேன்
Last Update: 2018-07-22 Usage Frequency: 4 Quality: Reference: Anonymous
clean india in tamil essay
தமிழ் கட்டுரையில் சுத்தமான இந்தியா
Last Update: 2016-02-05 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous
essay mother teresa
கட்டுரை அன்னை தெரேசா
Last Update: 2016-08-09 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous
history of mother teresa
Last Update: 2017-03-17 Usage Frequency: 6 Quality: Reference: Anonymous
tamil essay about mother
அம்மா பற்றி தமிழ் கட்டுரை
Last Update: 2016-10-01 Usage Frequency: 7 Quality: Reference: Anonymous
tamil essay respect in tamil
தமிழில் தமிழ் கட்டுரை மரியாதை
Last Update: 2023-06-29 Usage Frequency: 2 Quality: Reference: Anonymous
my country tamil essay in tamil
මගේ රට දෙමළ රචනාව දෙමළ
Last Update: 2023-10-22 Usage Frequency: 4 Quality: Reference: Anonymous
kalviyin sirappu in tamil essays
தமிழ் கட்டுரையில் கல்வியின் sirappu
Last Update: 2018-02-13 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
tamil essays in tamil social media
தமிழ் கட்டுரைகள் தமிழ் சமூக ஊடகங்களில்
Last Update: 2019-12-16 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous
Get a better translation with 7,781,545,077 human contributions
Users are now asking for help:.
COMMENTS
அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 - 5 செப்டம்பர் 1997), அல்பேனியா ...
Mother Teresa history in Tamil, real name in Tamil Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube முகப்பு
Annai Teresa Katturai In Tamil பொதுவான கட்டுரைகள் இந்த பதிவில் உலகையே அன்பினால் அரவணைத்த " அன்னை தெரசா கட்டுரை " பற்றி காணலாம்.
அம்பேத்கர் வரலாறு | Dr Br Ambedkar History in Tamil நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர...
சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்த தெரசா, தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார்.
இந்த பதிவில் நாம் அன்னை தெரசா பொன்மொழிகள் (Mother Teresa Quotes in Tamil) பற்றி ...
Mother Theresa is a saint who helped the needy she gives lovable care to all. அன்னைத் தெரசா சமூகத்தினால் ...
அன்னை தெரசா | தமிழ் கட்டுரை | பேச்சுப்போட்டி | வாழ்க்கை வரலாறு ...
Mother Mary Teresa, honored in the Catholic Church as Saint Teresa of Calcutta, was an Albanian-Indian Roman Catholic nun and missionary. She was born in Sko...
Jsj jesy education 😎Welcome to my channel ☺️10 lines on mother Teresa in tamilTamil katturaiதமிழ் கட்டுரைஅன்னை ...
Mother Teresa quotes in Tamil. உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் ...
500+ Words Essay on Mother Teresa. Essay on Mother Teresa: There are many humanitarian in the history of the world. Out of the blue, Mother Teresa stood in that crowd of people. She is a lady of great caliber who spends her whole life serving the poor and needy people. Although she was not an Indian still she came to India to help its people.
Mary Teresa Bojaxhiu MC (born Anjezë Gonxhe Bojaxhiu, Albanian: [aˈɲɛzə ˈɡɔndʒɛ bɔjaˈdʒi.u]; 26 August 1910 - 5 September 1997), better known as Mother Teresa, was an Albanian-Indian Catholic nun and the founder of the Missionaries of Charity.Born in Skopje, then part of the Ottoman Empire, at the age of 18 she moved to Ireland and later to India, where she lived most of her life.
in this video i will write short essay writing about annai theresa in tamil.hope u like my video plz like,share,subscribe my channel.#motherteresa#tamilessay...
Essay about mother Teresa in Tamil(with sub topics) Get the answers you need, now! allusai4975 allusai4975 25.02.2019 Math Secondary School ... Advertisement Azhar08 Azhar08 அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா ...
The world has witnessed many humanitarians but none as selfless as the great Mother Teresa. A non-native of the country, Mother Teresa devoted her life to the people of India. She made it the purpose of her life to feed the hungry, help the needy and tend to sick people who were shunned by the society. Her life was not an easy one but she was determined in her will to serve the poor and ...
My Hero My Mother Essay; My Mother Essay For Class 10; My Mother Is The Best Essay; Necessity Is The Mother Of Invention Essay In English; Relationship Between Mother And Daughter Essay; Revolutionary Mothers Essay; Role Of Mother In Our Life Essay; Short Essay On Mother For Kids; Short Essay On Mother Teresa In Hindi; Short Essay On Mother ...
Contextual translation of "essay mother teresa" into Tamil. Human translations with examples: அன்னை தெரசா பற்றி, அன்னை தெரேசா வரலாறு.
Mother Teresa Essay in Tamil | தமிழ் கட்டுரை | அன்னை தெரேசா சிறு கட்டுரை| Tamil Essay @𝐌𝐒𝐑 𝐖𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 ...
Get a better translation with7,762,656,218 human contributions. Contextual translation of "essay mother teresa in tamil" into Tamil. Human translations with examples: அன்னை தெரேசா, அன்னை தெரசா பற்றி, அன்னை தெரேசா வரலாறு.
#அன்னைதெராசா#MotherTeresa
Contextual translation of "mother teresa in tamil essay" into Tamil. Human translations with examples: அன்னை தெரேசா, அன்னை தெரேசா வரலாறு.
This is an 10 line essay about mother Teresa in tamil.#motherteresaessay#motherteresa#tamilessay#அன்னைதெரசா# ...